பக்கம்:பொன் விலங்கு.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 557

அநுதாபத்தைத் தங்கள் பக்கமாகத் திருப்பிக் கொள்ள வேண்டுமென்பதற்காக ஜமீன்தாரும் கண்ணாயிரமும் இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ஜமீன்தாருடைய சொந்தப் பத்திரிகையாகக் கைக்கு வந்து கண்ணாயிரத்தின் நிர்வாகத்தில் அடங்கிய பின் குத்துவிளக்கில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. பொது மக்களுடைய கவனத்தை மிக வேகமாகக் கவரவேண்டும் என்பதற்காக இரவில் நடந்த இருபது கொலைகள் என்ற அதி பயங்கரத் துப்பறியும் தொடர் கதையை 'இரத்தக்காட்டேரி என்னும் புனைப் பெயர் பூண்டபேயாண்டி என்ற மர்மக்கதை மன்னர் எழுதி வந்தார். திரைப்படச் சிங்காரிகளின் தலை அலங்காரங்களைப் பற்றிய புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவரலாயின. புதிதாக நியமிக்கப்பட்டிருந்த மலையாள ஆசிரியர் ஆங்கிலத்தில் எழுதுகிற தலையங்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்து கொண்டிருந்தன. குத்துவிளக்கின் ஊழல்களைப் பற்றியும், அதில் வருகிற தரக்குறைவான அம்சங்களைப் பற்றியும் அதே பத்திரிகையில் முன்பு வேலை பார்த்து வந்தவன் என்ற முறையில் குமரப்பனிடம் யாரோ நண்பர்கள் கேட்டபோது 'நாமெல்லாம் இருந்து வேலை பார்த்து அதை இன்னும் அதிக காலம் நன்றாக வாழவைத்துவிடக் கூடாது. இட் ஈஸ் மை விஷ் தட் இட் எண்ட்ஸ் இன் எ நேச்சுரல் டெத் (அது இயற்கையாகவே சாகும்படி விட்டுவிட வேண்டுமென்பதுதான் எனது ஆசை). துப்பறியும் கதைகளில் அதிகமாகச் செலவழிவது கொலை செய்யப்படுகிறவர்களின் இரத்தம். அதிகமாகச் செலவழியாதது அவற்றை எழுதுகிறவர்களின் மூளை. 'இரவில் நடந்த இருபது கொலைகள் என்ற தலைப்பை அதிபயங்கரமாகப் போட்டுவிட்டுத் தூக்கம் வராமல் வேதனைப்பட்ட கதாநாயகன் கட்டிலுக்கடியில் இருந்த இருபது மூட்டைப் பூச்சிகளையும் நசுக்கிக் கொன்றதாக முடிப்பதும் எரிந்த பங்களா என்று தலைப்பை எழுதிவிட்டுக் கடைசியில், 'நேற்றுவரை இருண்டு போயிருந்த அந்தப் பங்களாவில் இன்று விளக்கு எரிந்தது என்பதாக முடிப்பதும் கூட உண்டு. அதெல்லாம் என்ன செய்வதென்று தெரியாதவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/559&oldid=595816" இலிருந்து மீள்விக்கப்பட்டது