பக்கம்:பொன் விலங்கு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 57

நம்பிக்கை அளிக்கும் படியாக அப்போது தான் என்ன பதிலைச் சொல்ல முடியும் என்பதைச்சத்தியமூர்த்தி சிந்தித்தான். உடனடியாக நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரப்போகிற செய்தியைத் தன்னிடமிருந்து தந்தை எதிர்பார்த்தது தவறில்லை என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். அப்பாவைப்போல் வாழ்வில் ஏமாற்றங்களையும், துயரங்களையும் அதிகமாகச் சந்தித்தவர் இப்படித்தான் எதிர்பார்த்துத் தவிக்கமுடியும் என்பதும் அவனுக்குத் தெரியும். வாழ்க்கையில் ஏமாற்றமடைகிறவர்கள் நிறைய இருப்பார்கள். ஆனால் அப்பாவைப்போல் வாழ்க்கையையே ஏமாற்றமாக அடைந்தவர்களின் துன்பம் மிகவும் பெரியது. சத்தியமூர்த்திக்கு நினைவு தெரிந்து தந்தை கிழிசல் இல்லாத சட்டையும், வேட்டியும் அணிந்து அவன் பார்த்ததில்லை. ஆசிரியர் தொழிலின் மேலேயே அவர் கசப்பையும் வெறுப்பையும் வளர்த்து விட்டுக் கொண்டதற்கு அவரே ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்து அடைந்த துன்பங்கள்தான் காரணம் என்பதும் சத்தியமூர்த்திக்குத் தெரியும். தன்னைப் பற்றிய அப்பாவின் கற்பனைகளையும், ஆசைகளையும் அவன் பொறுத்துக் கொண்டான். காரணம், அவருடைய உத்தியோக வாழ்வில் அவர் அதிகமாக அதிருப்தியும் துன்பமும் அடைந்தவர் என்பதுதான். -

ஊருக்குப்போய் இறங்கியவுடன் தன் தந்தை தன்னைக் கேட்கப் போகிற கேள்வியையும், இண்டர்வ்யூ முடிகிற நேரத்தில் திடீரென்று புதிராக மாறிவிட்ட பூபதி தன்னைப் பற்றி என்ன முடிவுக்கு வந்திருப்பார் என்ற கேள்வியையும் மனத்தினுள்ளே எதிரெதிராக நிறுத்திப் பார்த்தான் சத்தியமூர்த்தி. இரண்டு கேள்விகளுமே விரோதிகள் எதிரெதிரே சந்தித்துக் கொண்டாற்போல் ஒரு விளைவும் இன்றி அப்படிஅப்படியே திகைத்து நின்றன.முதல்நாள் அவனுடைய சூட்கேசில்துணிமணிகளை எடுத்துநிரப்பிக்கொண்டே"என் கைராசி வீணாகிவிடாது அண்ணா திரும்பி வரும்போது கையில் ஆர்டரோடு வரப்போகிறாய். பார்த்துக் கொண்டே இரு...' என்று உற்சாகத் துள்ளலோடு தன் தங்கை ஆண்டாள் கூறியிருந்ததையும் இப்போது நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி, சிறிய தங்கை கல்யாணியை விட ஆண்டாள் விவரம் தெரிந்தவள். குடும்பக் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொண்டவள். சிறிய தங்கையின் உலகம் துப்பறியும் நாவல்களை ஒரே மூச்சில் படிப்பதோடு ஆரம்பமாகி 'எம்பிராய்டரி வேலைகளோடு முடிந்துவிடும். மூத்தவள் ஆண்டாள் மேல்தான் சத்தியமூர்த்திக்கு பாசம் அதிகம். இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/59&oldid=595850" இலிருந்து மீள்விக்கப்பட்டது