பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பொய்ம் முகங்கள் தலைமையாசிரியரின் தொடர்ந்த உபத்திரவங்களைக் கண்டு இதை மீண்டும் நினைவு கூர்ந்தான் சுதர்சனன். அதனால் அவன் முரண்டுகளும் அதிகமாயின. சிரமங்களும் அதிகமாயின. கவுண்டர் மக்னுக்குக் கலப்புத் திருமண ஏற். பாடு செய்திருந்த தினத்தன்று மகனை வீட்டில் ஒர் அறை. யில் அடைத்துப் பூட்டிவிட்டார் கவுண்டர். திருமண நேரம் நெருங்கவே பன்னீர்செல்வமும், சுதர்சனமும் மன மகனைத் தேடிக் கவுண்டர் வீட்டுக்குச் சென்றார்கள். கவுண்டர் வக்கில், போவிஸ் இன்ஸ்பெக்டர் எல்லாரையும் கலந்து பேசி ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்தபடி தம் விட்டுக் காம்பவுண்டுக்குள் நுழைந்த பன்னிர்செல்வத்தை ' சுதர்சனனையும் டிரஸ் பாஸ் என்ற குற்றத்தைச் 'சிக் கைது செய்யும்படி பண்ணிவிட்ட் சுதர் சனனோ பன்னீர்செல்வமோ இதை எதிர்பார்க்கவில்லை. "மும் செல்வாக்கும் எதை எதை எல்லாம் சாதிக்க. 4ே4 எப்படி எப்படி எல்லாம் தங்கள் எதிரிகளை அலைக்கழிக்க முடியும் என்பது அன்று சுதர்சனனுக்குப் புரிந்தது. மாலைக்குள் இயக்கப் பெரிய மனிதர்கள் சிலர் வந்து ஜாமீனில் சுதர்சனனையும் பன்னீர்செல்வத்தையும் இடுவித்து விட்டார்கள் என்றாலும் நடத்தவிருந்த கலப்புத் திருமணத்தை நடத்துவதற்கு முடியாமல் அது நின்று போய் விட்டது. & - . . - T கிராமங்களில் இன்னும் நிலச்சுவான்களுக்கும், பணக் காரர்களுக்குமே செல்வாக்கு இருப்பதைச் சுதர்சனன் நிதர் சனமாகப் புரிந்து கொண்டான். அவனையும், பன்னீர்" செல்வத்தையும் சிலமணி நேரம் போலிஸ் லாக்-அப்பில் தள்ளுகிற அளவு அந்தச் செல்வாக்கு அன்று பயன்பட்டு விட்டது. அந்த வட்டாரத்தில் செல்வாக்கும் வசதியும் பெற்றிருந்த சிலர் பன்னீர்செல்வத்தின் இயக்கத்திற்கு ஆதரவாகவும் இருந்தனர். அவர்கள் முன்வந்து ஜாமீன்