பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பொய்ம் முகங்கள் ஜமீன்தார்வாள்! நீங்க மீட்டிங்கைக் கவனியுங்க'-என்று கூறியபடியே அருள்நெறி ஆனந்தமூர்த்தியும், வேறு இரண் டொருவரும் தங்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து மெல்ல. எழுந்திருக்கத் தலைப்பட்டார்கள். தாங்கள் அப்படி எழுந் திருந்து போக முயன்றால் ஜமீன்தார் தங்களைத் தடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் இருக்கைகளை விட்டு எழுந்திருந்தனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. யாரோ சொன்னான்கிறதுக்காக நீங்க ஏன் எழுந்திருக் கிறீங்க? உட்காருங்க, இது என் வீடு. நான் எழுந்திருந்து போகச் சொன்னால்தான் நீங்க போகனுமே ஒழிய யாரோ சொன்னான்னா நீங்க ஏன் எழுந்திருக்கணும்'-என்று ஜமீன்தார் நண்பர்களைச் செல்லமாகக் கடிந்து கொண்டு மறுபடி அவரவர்சுள் . இருந்த இடத்திலேயே அப்படி அப்படியே உட்கார வைத்து விட்டார். அவர்களும் அவர் அப்படிச் சொல்வதற்காகவே காத்திருந்தாற்போல உடனே உட்கார்ந்துகொண்டு, இனிமே நீ என்ன செய்வே!என்று அவனுக்கு அழகு காட்டுவதுபோல் சுதர்சனனை முறைத்துப் பார்த்தார்கள். சுதர்சனன் இதை எல்லாம்கண்டு ஒரு சிறிதும் அயர்ந்து விடவில்லை. அப்போ ஒண்னு செய்யுங்க சார்! நீங்கள் 'ளாம் பேச வேண்டியதைப் பேசிட்டு என் சம்பந்தப்பட்ட விசாரணை எப்பவோ அப்ப சொல்லி அனுப்புங்க. அது வரை நான் வெளியிலே இருக்கேன். ஆனா ஒண்னு மட்டும் உறுதி என்னை நீங்க விசாரிக்கிறப்ப நீங்களே எனக்கு அனுப்பியிருக்கிற மெமோவிலே இருக்கிற மாதிரி இங்கே ஸ்கூல் நிர்வாகக் கமிட்டி மெம்பர்ஸ் மட்டும்தான் இருக்க னும்கிறது. நிச்சயம்'-என்று கூறி விட்டுக் கிளம்புவதற்குத் தயாரானான். உடனே ஜமீன்தார் உணர்ச்சி வசத்தில் ஆத்திரப்பட்டு 'இந்தாப்பா பேசறதைக் கொஞ்சம் நிறுத்து. ஏதோ உனக்குத்தான் பேசத் தெரியும்கிற மாதிரி மேலே மேலே பேசிக்கிட்டே போறியே? யாருக்கு முன் னாலே நின்னு என்ன பேசிக்கிட்டிருக்கோம்கிறதாவது