பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொசுக்கிவிட்டால் வெர்க்கும்

நன்மையுண்டாம்

என்று பாடுகிறார். இத்தகைய மிகச்சிறப்பான கருத்தை இதுவரை யாரும் கூறவில்லை. .

சென்ற காங்கிரஸ் ஜனசபை ல்க்நெள நகரத்தில் கூடிக் கலைந்த பிறகு ஸ்ரீமான் லோகமான்ய பால கங்காதரத்திலகர் தமது இஷ்டர்களுடன் கான்பூருக்கு வந்தார். அங்கு ராம லீலை நாடக வெளியில் பதினையாயிரம் ஜனங்கள் சேர்ந்த பொதுக்கூட்டம் ஒன்று கூடி அவரை ஸ்வராஜ்ய போதனை செய்யும்படி வேண்டினார்கள். ஸ்வராஜ்ய பேச்சுக்கிடையே அவர் ஜாதிக்கடடை குறித்துச் சொல்லிய சில வார்த்தைகளை இங்கு மொழி பெயர்த்துக்காட்டுகிறேன்.

திலகர் சொன்னார். ‘பழங்காலத்து நான்கு வர்ணப்பிரிவுக்கு இப்போதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. திருஷ்டாந்தமாக இப்போது ஒரே பந்தியில் இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்குலக்ஷணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படி இல்லை.

நான்கு வர்ணங்கள் பிறப்பினாலேயல்ல. குணத்தாலும் தொழிலாலும் உண்டாயின என்று கீதை சொல்லுகிறது. அதன்படி பார்த்தால் இப்போது நமக்குள் கூடித்தியர் எங்கேயிருக்கிறார்கள்? நம்மைக்காப்போர் ஆங்கிலேயர். ஹிந்துக்களுக்குள் கூடித்திரியரைக் காணோம். இந்தக்கான்பூர்பெரிய வியாபார ஸ்தலம். ஆனால் இங்குள்ள வைசியர் பிற தேசத்து வியாபரிகளின் வசத்தில் நிற்கிறார்கள். செல்வத்தலைமை நமக்கில்லை. இப்போதுள்ள பிராமணர் தாமே தேசத்தின் மூளை என்று சொல்லுகிறார்கள். ஆனால் இந்த மூளை மண்ணடைந்து போய், நாம் வெளியிலிருந்து அதிக மூளை இறக்குமதி செய்யும்படி நேரிட்டிருக்கிறது. -

‘'நான்கு வர்ணத்தாருக்குரிய நால்வகைத் தொழில்களும் ஹிந்துக்களல்லாத பிறர் நியமனப்படி நடக்கின்றன. நாமெல்லாரும் தொண்டர் நிலையிலே இருக்கிறோம். தேசம் கெட்ட ஸ்திதியிலே இருக்கிறது. உங்களுடம்பில் பிராமணரத்தம் ஓடுவதாகவும் rத்திரிய ரத்தம் ஒடுவதாகவும் நீங்கள் வாயினால் சொல்லலாம். ஆனால் உங்களுடைய வாழ்க்கை அப்படியில்லை.

இவ்வாறு திலகர் சொல்லியதிலிருந்து நமது தேசத்திற்கு மிகுந்த் நன்மை உண்டாகக்கூடும். ஏனென்றால் இவர் தேசம் முழுவதிலும் சுதேசீயக்கட்சியாருக்குத் தலைவராக இருப்பது மாத்திரமேயன்றி மஹா ராஷ்டிரத்து வைதீகப் பிராமணர்களின் தலைவராகவும் விளங்குகிறார். வேத சாஸ்திர ஆராய்ச்சியில் உயர்ந்த கீர்த்த பெற்றவர். நெடுங்காலமாக

| 36