பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாவது ராஜரீக வாழ்விலும் அக்கொள்கை தானே பரவி விடும். இதைவிட்டுப் பொய்யும் புலையுமாக திராவிடர்களென்றும் ஆரியரென்று முள்ள பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதனால் ஹிந்து சமூகத்துக்கே கெருதி விளையக்கூடம் எந்த வகுப்புக்கும் அனுகூலம் ஏற்படாது’ என்று மகாகவி பாரதியார் எழுதுகிறார்.

பிராமணன் யார்?

ஒர் உபநிஷத்தின் கருத்து

அஷ்டாதச உபநிஷத்துக்களிலே வஜர ஸ்சிைகை என்பதொன்று. ‘வஜரஸ் அசி’ என்றால் வைர ஊசி என்பது பொருள். இவ்வுபநிஷதம் ‘பிராமணர் யார்’ என்பதை குறித்து மிகவும் நேர்த்தியாக விவரித்திருக்கின்றது.

‘நான் பிராமணன், நீ சூத்திரன்’ என்று சண்டை போடும் குணமுடையவர் களுக்கெல்லாம் இவ்வேத நூல் தக்க மருந்தாகும். அன்னிய ராஜாங்கத்தாரிடம் ஒருவன் போலிஸ் வேஷத் தொழில் பார்க்கிறான். அவன் ஒரு பூணுலைப் போட்டுக் கொண்டு ஏதேனும் ஒரு நேரத்தில் கிராம போன் பெட்டி தியாகைய கீர்த்தனைகள் சொல்வது போல பொருள் தெரியாத சில மந்திரங்களைச் சொல்லிவிட்டு ஐயர், ஐயங்கார் அல்லது ராயர் என்று பெயர் வைத்துக் கொண்டு “நான் பிராமணன். நான் தண்ணிர் குடிப்பதைக் கூட மற்ற வர்ணத்தவன் பார்க்கலாகாது’ என்று கதை பேசுகிறான். மற்றொருவன் தாசில்தார் வேலை பார்க்கிறான். பஞ்சத்தினால் ஜனங்கள் சோறின்றிமடியும் போது அந்தத்தாசில்தார் தனது சம்பளம் அதிகப்படும் பொருட்டு, ‘பஞ்சமே கிடையாது, சரியானபடிதீர்வை வசூல் செய்யலாம்’ என்று ரிப்போர்ட் எழுதி விடுகிறான். ஆறிவொரு கடமைக்கு மேல் ராஜங்கத்தார் தீர்வை கேட்பதே குற்றம் பஞ்சநாளில் அது கூடக்கேட்பது பெருங்குற்றம். அங்ஙனம் தீர்வை வாங்கிக் கொடுக்கும் தொழிலிலே இருப்பவன் ஹிந்து தர்மத்திற்கு விரோதி. அதற்குமப்பால் உள்ள பஞ்சத்தை இல்லை என்றெழுதி ஜனத்துரோகம் செய்யும் தாசில்தாருக்கு என்ன பெயர் சொல்வதென்று நமக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட தாசில்தார் தனக்கு சாஸ்திரியாம்? என்று பெயர் வைத்துக் கொண்டு, ‘நான் கெளதமரிஷியின் சந்ததியிலே பிறந்தேன்’ என்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்கிறான். இப்படியே வைசியத் தொழில் சூத்திரத் தொழில் என்ற கெளரவத் தொழில் செய்வோரும் இவற்றிற்குப் புறம்பான புலைத் தொழில்கள் செய்வோரு மாகிய பல போலிப் பார்ப்போர் தங்களுக்கு இயற்கையாகவுள்ள பெருமையை மறந்து விட்டுப் பொய்ப் பெருமையைக் கொண்டாடி வருகிறார்கள்.

நாட்டிலே இவ்விஷயமான விவாதங்களும் போராட்டங்களும் அதிகரிக்கின்றன. இத்தருணத்தில் நமது வேதம் இவ்விவகாரத்தைப் பற்றி

145