இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இங்கு முருகன் பார்ப்பனக் கோலத்தில் வள்ளியைப் பிடிப்பதை ஜாதி சமத்துவத்தை பாரதி வெளியிடுகிறார்.
சிவசக்தி என்னும் தலைப்பில்
நின்னருள் வேண்டுகின்றோம்
-எங்கள்
நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே”
என்று கூறி நமது நலன்கள் அனைத்தையும் காத்திட சிவ சக்தியை வேண்டுகிறார்.
காணி நிலம் வேண்டும் என்றும் பாடலில்,
“என்றன் பாட்டுத்திறத்தாலே
இவ்வையத்தை
பாவித்திட வேண்டும்’ என்று வேண்டுகிறார். நல்லதோர் வீணை-பாரதி
நல்லதோர் வீணை செய்தே. அதை நலங்கெடப் புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து
விட்டால் என்றும்,
வல்லமை தாராயோ- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி-நிலச் i சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவையே எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
| 7