பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மகாத்மா காந்தி முதல் ஐந்தாவது மாடியிலிருந்து; கொடியவன் ஒருவன் சுட்ட துப்பாக்கி குண்டுகள் கென்னடியின் குரல் வளையைத் துளைத்துக் கொண்டு சென்றது. இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து விட்டது. ரத்த வெள்ளத்தில் துவண்ட கணவனை ஜாக்குலீன் மார்போடு அணைத்துப் பிடித்துக் கொண்டாள். கார் மருத்துவமனையை நோக்கி 60 மைல் வேகத்தில் பறந்தது. தீவிர வைத்திய உதவிகள் அளித்தும், அந்த மகத்தான மனிதர் கென்னடியின் உயிரைக் . காப்பாற்ற எந்த மருத்துவர்களாலும் இயல வில்லை. கென்னடியின் மறைவைக் கேட்டு உலகமே கண்ணிர் வடித்தது. அன்பைக் காட்டவும், அஞ்சலி செலுத்தவும் கண்ணிரை விடப் புனிதமான பொருள் வேறு என்ன இருக்கிறது!