பக்கம்:மக்கட் செல்வம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. மறத்துக்கும் அஃதே துணை



அன்புள்ள மங்கையர்க்கரசிக்கு,

எனது முன்னைய கடிதங்களையெல்லாம் முறையாகப் படித்திருப்பாய் என நினைக்கின்றேன். மக்கட் பிறவியில் பெருஞ் செல்வங்களுள் சிறந்தது குழந்தைச் செல்வமே என்பதறிந்தாய். ஆம்! அக்குழந்தை, பெற்றெடுத்தவர்களுக்கு கண்டு, கேட்டு, உற்று அறியும் வகையில் பலப் பல இன்பம் தரும் ஒன்று. மற்றும் அதே குழந்தை பெரியவர்கள் - பெற்றவர்கள் - தவறிவிடுவார்களாயின் திருத்தும் ஞானச் செல்வமாகவும் விளங்குகின்றது. திருவள்ளுவனார்

‘அறத்திற்கே அன்பு சார்புஎன்ப அறியார்

மறத்துக்கும் அஃதே துணை’

என்று அன்பின் சிறப்பினைக் காட்டுகின்றார். பின் அடிக்கு விளக்கம் கூறவந்த பரிமேலழகர் “மறத்தை நீக்குதற்கும்