பக்கம்:மக்கட் செல்வம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மறத்துக்கும் அஃதே துணை


34 செல்வி !

இனி இங்கு மற்றோன்று எண்ணவேண்டும். இன்று நாட்டில் இத்தகைய பரத்தமை வழக்கம் கிடையாது. தனிப்பட்ட வகையில் ஒரு சிலர் அவ்வாழ்வை மேற்கொள்ள விரும்பினாலும் நாட்டுச் சட்டம் அதற்கு இடம் தராது. மேனாடு நாகரிகச் சேற்றில் தம்மை மறந்து மூழ்க நினைக்கும் ஒருசிலர், வாழ்வில் ஒரு வேளை வழுக்கி விழ நேரினும் நாட்டுச் சட்டமும் நல்லவர் அறிவுறுத்தலும் அவர்களைத் திருத்துவதைக் காண முடியும். எனவே இன்று இப்பரத்தமையும் அதை ஒட்டிய செயல்களும் அநாகரிகச் செயல்களாகத் தள்ளப் பட்டன. ஆகவே இத்தகைய காட்சிகளே இலக்கியத்தில் தான் காணமுடியும். ஆம்! அந்த இலக்கியங்களைத்தான் புலவர்கள் எத்தனை எத்தனை அழகாகப் பாடியுள்ளார். கள் என்பதை நீயே வாய்ப்பு நேரும்போது கலித்தொகை போன்ற இலக்கியங்களைப் படித்துப்பார்த்து அறிந்து கொள். நானும் அடுத்த கடிதத்தில் இன்னும் சில: இலக்கியங்களைக் காட்டுகின்றேன். இன்று இது போதும்.

அன்புள்ள, அப்பா.