பக்கம்:மக்கட் செல்வம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

தாயில் தூவாக் குழவி


 அன்புள்ள அரசி !

எனது முன்னேய கடிதங்களை நன்கு படித்திருப்பாய். இன்று தாய் குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய வகைகளில் இரண்டொன்றை உனக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். குழந்தை, தன்னைப் பெற்றவர்களுக்கு என்னென்ன வகையில் இன்ப முட்டி மகிழ்விக்கின்ற தென்பதை இப்போது நீயே நன்கு அறிந்து கொண்டிருப்பாய். ' நான் ஏட்டில் எழுதியதைக் காட்டிலும் ஆயிரமாயிரம் இன்ப உணர்வுகளே உனக்கு உன் குழந்தை நல்கி இருக்குமல்லவா! ஆம்! அத்தகைய செல்வத்துட் செல்வமாகிய குழந்தைய ஒம்பி வளர்க்கும் பொறுப்பு உன்னுடையதேயாகும்.

இன்று குழந்தை வளர்பினைப் பற்றிச் சிற்சில நூல்கள். தமிழிலும் பிறமொழிகளிலும் வெளிவருகின்றன. பெற்ற குழந்தையைப் போற்றிப் பாராட்டிக் கண்மணி போன்று காத்தல் பெரியவர் கடமை என்பதை அவை