பக்கம்:மக்கட் செல்வம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழவி

43



என்கின்றார். இவ்வாறு புலவர்கள் பெற்ற தாயாருக்குப் பிள்ளைகளைப் போற்றி வளர்க்கும் கடமையை நேராகக் காட்டுவதோடு, அவ்வாறு தாயாரால் பாதுகாக்கப் பெரு விடின் குழந்தைகள் எவ்வாறு ஏக்கமுறும் என்பதையும் காட்டுகின்றார்கள். இவற்ருலெல்லாம் அறிவது யாது? ஆம்! தாழ் பெற்ற குழந்தையே பெருஞ் செல்வம் எனக் கருதி அதைக் கண்ணெனக் காக்க வேண்டியது மகப் பெற்ருர் கடன் என்பதுதான். கடிதம் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே இத்துடன் இன்று அமைகின்றேன்.

நீ உன் குழந்தையைக் கருத்தாகக்காக்க வேண்டியகடமையிலிருந்து சிறிதும் வழுவலாகாது என்ற அறிவுரை யோடு இன்று இக்கடிதத்தை முடித்துக் கொள்ளுகின்றேன்.

அன்புள்ள, அப்பா.