பக்கம்:மக்கட் செல்வம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. சிறுவர்ப் பயந்த செம்மலோர்



அன்புடைச் செல்வி மங்கையர்க்கரசிக்கு !

நலன். உன் கடிதம் வந்தது. எனது முந்திய கடிதங்களையெல்லாம் முறையாகப் படித்து அறிந்துகொண்டாய் என உன் கடிதத்தின் வழி விளங்கிற்று, நல்லது. செல்வத்துள் செல்வமாகிய இம்மக்கட் செல்வம் அவ்வாறு போற்றிப் புரப்பவர்களுக்குத் தளரா மகிழ்ச்சியையும் தாழாச் செல்வத்தையும் தரும் என்பது உறுதி. இப்புதல்வரைப் பெறும்பொற்றோடியார் வாழ்வே சிறந்த வாழ்வு. அல்லாதார் வாழ்வைப் பற்றி என்ன சொல்வது?

திருவிளையாடற் புராணத்து வரும் ஒரு கதை உனக்கு நினைவு இருக்கலாம். கதையைப் பற்றி இங்கு உனக்குச் சொல்ல விரும்பவில்லை; தேவையற்றதும் கூட. என்றாலும் குழந்தைச் செல்வத்தைப் பற்றி அதில் வரும் இரண்டு அடிகளே மட்டும் உனக்கு நினைப்பூட்டுகிறேன். தனபதி செட்டியார் தனக்கு மகவில்லை என்று உடன்