பக்கம்:மக்கட் செல்வம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8.

குழந்தையும் தெய்வமும்



அன்புள்ள அரசி!

எனது முன்னய கடிதங்களையெல்லாம் முறையாகப் படித்துப் பயன் பெற்றிருப்பாய் என எண்ணுகிறேன். எழுத்தில் எவ்வளவுதான் படித்தாலும் குழந்தையிடம் நேரில் கொஞ்சிக் குலவிப் பெறுகின்ற இன்பத்துக்கு இணையாகாது என்பதை உணர்வேன். நீயும் இதற்குள் இந்த உண்மையை உணர்ந்திருப்பாய். என்றாலும் அக் குழந்தையின் பெருஞ்செல்வம் பற்றிப் பலப்பல அறிஞர்கள் எவ்வெவ்வாறு பாராட்டியுள்ளனர் என்பதைக் காட்ட வேண்டும் என்ற விருப்பத்தாலேயே இவ்வளவையும் எழுதிக் கொண்டு வருகிறேன். & குழந்தையைத் தெய்வத்தோடு சார்த்திக் கூறுகின்றனர் என்பதை நீ அறிவாய். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்ற பழமொழி உனக்குப் பழைய மொழிதானே. எனவே இரண்டையும் பிணைத்