பக்கம்:மக்கட் செல்வம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

பாலுண்ணும் பசுங்குழவி


 அன்புள்ள மங்கைக்கு !

எனது முந்திய கடிதத்தில் குழந்தையாகிய கண் ணனை நினைத்துத் தேவகி புலம்பிய ஒரு பாடலைக் குறித்திருந்தேன் அல்லவா! அந்தப் பத்துப்பாடலையும் அப்படியே இரண்டொருமுறை திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும் என உணர்வு பிறந்தது. உயர்ந்த அரசசெல்வத்தில் பிறந்த குலசேகர் இத்தனை உருக்க மாக-அதிலும் கண்ணனைக் குழந்தையாக-எண்ணிப் பாடும் இயல்புபெற்றதை எண்ணி எண்ணி வியந்தேன். இன்று செல்வர் என்று தம்மைக் கூறிக் கொள்ளுகின்றவர் பலர் குழந்தை இன்பத்தை அறியாமல் உள்ளவர்களே. பிள்ளை பிறந்தால் அதைப் பாராட்டிச் சீராட்டி வளர்க்கத் தாய்மார்களுக்குத் தெரியாது; அன்றித் தெரிந்தாலும் அது நாகரிகமன்று எனக்கூட எண்ணுவார்கள். இன்றைய நாகரிகம் அத்தகையது.