பக்கம்:மக்கட் செல்வம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பசுங்குழவி

73


பாராட்டுகின்றார். ஆம்! இந்த இன்பத்தை ஏட்டிலே விளக்கி எழுத முடியாது. குலசேகரர் எப்படியோ பாட்டில் அழகாக வடித்துவிட்டாரே ஒழிய, யாராலும் விளக்கமாக அழகுபடக் காட்ட முடியாது. அவரவர் அந்த இன்பத்தைப் பெற்றபொழுதுதான் அறிந்து மகிழ்வர். பெற வாய்ப்பிருந்தும் இழப்பவர்களையும், வாய்ப்பே இல்லாதவர்களையும் என்ன சொல்லிக் காட்ட முடியும்? நீ உன் அருகில் உள்ள குழந்தையின் செயல் அனைத்தையும் ஊன்றிக் கவனித்துக்களித்து மகிழ்வாய் என நினைக்கின்றேன். இதோ அந்த இன்பத்திலே உன்னை இருக்கவிட்டு என் கடிதத்தை முடித்துக் கொள்ளுகிறேன்.


அன்புள்ள,
அப்பா.