பக்கம்:மக்கட் செல்வம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கருவில்



படித்து மொழிபெயர்க்க நினைத்தாலும் அதில் வெற்றி அடைந்தனர் என்று சொல்லமுடியாது. மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இக்கருவளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு இருக்கின்றது, என்றாலும் அவருள்ளும் நன்கு பயின்று அதை புரிந்து கொள்ளுபவர்கள் மிகமிகச் சிலரே! எனவே நான் அந்தச் சிறப்பைப் பற்றி அதிகமாக உனக்கு எழுத முடியாது. என்றாலும் சிலவற்றைப்பற்றி இங்கு உனக்கு எழுத நினைக்கின்றேன்.

இந்த இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி பெரிதாக வளர்ந்து வந்துள்ளது. அதனால் உடலின் புற அமைப்புக்களை மட்டுமன்றி உள்ளமைப்புக்களையும் நன்கு அறிந்துகொள்ள வாய்ப்பு உண்டாகியிருக்கிறது. அதனால் கருவில் நாள்தோறும் உண்டாகும் மாற்றங்களை யெல்லாம்கூட நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் இன்றைக்கு ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இக்கருவில் வளரும் ஒரு குழந்தையின் முறையான வளர்ச்சியைப் பற்றி ஒருதுறவி குறிக்கின்றார் என்றால் அது உனக்கு வியப்பாக இல்லையா? ஆம்! அதுபற்றி அவர் எப்படி அறிந்தார் என்று சொல்லமுடியாது. என்றாலும் அவர் அக்கருவின் தோற்ற வளர்ச்சியை முறைப்படுத்திக் காட்டுகின்றார். இன்று காட்டுவது போன்று நாள்தோறும் காணும் வளர்ச்சியைக் காட்டா விட்டாலும், முதலில் கருத்தோன்றி, நீர்த்தன்மையாக இருந்து, பிறகு கட்டியாக மாறுவதையும், அடுத்து மூளை கரு அமை நரம்புகளும், அடுத்து எலும்புகளும் தோன்றுவதையும் அவர் முறைப்படிக் காட்டுகின்றார். கருவில் முதலில் உண்டானது நரம்பா எலும்பா என்ற ஆராய்ச்சி சில ஆண்டுகளுக்கு முன் வரை முடியாத ஆராய்ச்சியாக இருந்தது. இப்போது முன் கருநரம்பு (Originative nerves) தோன்றிப் பின் எலும்பும் அதன்பின் வேறு