பக்கம்:மக்கட் செல்வம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை I

91


உள்ள பல நரம்புகளும் தோன்றுகின்றன என்று கண்டனர். இதைத்தான் அந்தப் புலவர் அழகாகப் பாடலில் காட்டுகின்றார். யார் அந்தப் புலவர்? உனக்கு முன்னமே அறிமுகமானவர்தான். நீ அவர் பாடல்களை நாள்தோறும் படித்துத்தான் இருக்கிறாய். நான் சொல்லப் போகும் பாடலும் உனக்குத் தெரிந்ததுதான். ஆம்! அவர் திருநாவுக்கரசர்தான். இதோ கருவைப் பற்றி அவர் பாடிய பாடல்,

‘கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
       கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து ஒன்றாகி
உருவாகிப் புறப்பட்டு இங்கு ஒருத்திதன்னால்

       வளர்க்கப் பட்டு’

என அவர் தம் தேவாரத்தில் கருவில் வளரும் குழந்தையைக் காட்டிவிட்டார். அன்று அவர் காட்டிய உண்மையைத்தான் இன்று பல விஞ்ஞானிகள் ஆய்வுக்களத்தில் பலகருவிகள் கொண்டு துருவித் துருவி ஆராய்ந்து. வெளிப்படுத்துகின்றார்கள்.

இவ்வாறு கருவில் குழம்பாகிப் பின் கலித்து மூளை, கருநரம்பு, எலும்பு முதலியவற்றைப் பெற்றுத் தோலால் மூடப்பெற்று உருவாகும் குழந்தையின் கருவின் வளர்ச்சியைப்பற்றி மேலை நாட்டு அறிஞர்கள் நன்கு கண்டு எழுதியுள்ளர்கள். அவற்றுள் சிலபற்றி இங்கே உனக்குக் குறிக்கலாம் என நினைக்கிறேன்.

அன்பின் அரசி !

தாயின் வயிற்றில் தோன்றி வளரும் கருவின் வளர்ச்சியே வேடிக்கையானது. அது முதல் முதல் பெண் கருத்தறிக்கும் நாள் தொடங்கிச் சத்திர மாதங்கள் பத்து கழித்தே மண்ணில் நிறைவுற்ற குழந்தையாகப் பிறக்கும். இந்தச் சந்திரமாதத் திங்கள் 27 நாட்கள் கொண்டதாகும். இன்றைய நாட்காட்டியின் வழி இதைக் கணக்-