பக்கம்:மக்கட் செல்வம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை I

93


ஆராய்ச்சியாளர் தம் உண்மையை நினைத்தால் அந்தப் பழங்குடி மக்களைப் பாராட்டத்தானே தோன்றும், ‘பாத்திர மறிந்து பிச்சை இடு, கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு’ என்பதும் சாதாரணப் பழமொழி என்பது உனக்குத் தெரியுமே. ஆகவே கரு தோன்றுவதில் அவர்வர் பழமையில் தோன்றும் பண்பும் பிறவும் பொருந்தியே அமைகின்றன என அறியவேண்டும். அதனால் தான் இந்தக்காலத்தில் சிலர் கலப்பு மணம் வேண்டும், மணம் செய்துகொள்வதில் சாதி வித்தியாசம் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்லுகிறார்கள். அதற்கு ஏற்பப் கலப்பால் சிறக்க வளரும் மாடு முதலியவைகளையும் மாமரம் முதலியவற்றையும் எடுத்துக் காட்டுகின்றார்கள். அது பற்றியெல்லாம் நான் இங்கே உனக்கு அதிகம் எழுதப் போவதில்லை. தேவையும் இல்லை.

நிற்க, கருவில் எப்படிக் குழந்தை தோன்றி வளர்கிறது என்பதைத்தான் நான் இங்கே கூற நினைத்தேன். நம் ஊர்களில் உள்ள ஓடைகளிலும் ஆற்றிலும் தவளைகளின் முட்டைகள் நீண்டு நீண்டு கோர்வையாகச் செல்வதை நீ அறிவாய். பின் அவைகளில் ஆயிரத்தில் ஒன்றோ அதற்கும் குறைவாகவோ முட்டையிலிருந்து வெளிப்பட்டுத் தலையும் வாலும் உடையதாகத் தண்ணீரில் நீந்துவதையும் நீ கண்டிருப்பாய். மனித இனத்தின் முதல் கருநிலையும் அத்தகையதே பெண் வயிற்றில் கருவின் தொடக்க அளவை மேலை நாட்டு அறிஞர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். அது தனது வடிவில் 117 முதல் 142 அங்குலம் தான் இருக்குமாம். சில சமயம் அந்த அளவிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட கருக்களும் தங்கி இருக்குமாம். அப்போதுதான் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் போலும்.

தோன்றிய கரு முதலில் முட்டைவடிவாக வட்ட நிலையில்தான் இருக்குமாம். பின்னரே அது வேற்று