பக்கம்:மக்கட் செல்வம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கருவில்



வடிவுகொள்ளும் என்பர் ஆராய்ச்சியாளர். மேலே கண்ட தவளைக் கரு வாலுடன் நீண்டு முட்டையிலிருந்து வெளிவருவதுபோன்றுதான் இந்த மனிதக் கருவும் நீண்ட வாலுடன் இருக்கும் என்பர் தலை கழுத்து உடம்பு கால் என்று ஒன்றும் கருத் தோன்றிய காலத்தில் காணமுடியாது. ஆனாலும் ஏதோ வடித்தது போன்ற இலை வடிவமும் அதை ஒட்டிச் சற்றுத் தடிப்பும் பிறகு நீண்ட வாலும் தான் கருவின் முதல் தோற்ற நிலையாகும் அந்த வால் போன்ற உறுப்பில் 10, 12 மெல்லிய நார்கள் இருக்கும். இவை அந்த விரிந்த தலைப்பாகத்திலிருந்து தொங்கிக் கொண்டு இருக்கும். இந்த நீண்டவால் போன்ற அமைப்பே பிறகு உடல் கால் முதலியன உண்டாவதற்கு இடம் கொடுக்கும் எனக் காணமுடியும். அந்தத் தலைப்பாகத்தில் முதலிலேயே இரண்டுக்கு மேற்பட்ட அறைகள் இருக்கின்றன எனக் கண்டு பிடித்துள்ளனர்.

இவ்வாறு கரு அமையும் நிலை அது தோன்றிய ஆறு நாட்களிலேயே அமைந்து விடுகின்றது. கருவின் வளர்ச்சியிலே அடிக்கடி மாறுதல் நிகழ்ந்து கொண்டே இருக்கும் போலும். ஆறாம் நாளிலும், எட்டாம் நாளிலும் பத்தாம் நாளிலும், பதினான்காம் நாளிலும் கருவளர்ச்சியில் சிற்சில மாறுதல்கள் நடந்துகொண்டே இருக்கும். இருபதாவது நாளில் அதன் வளர்ச்சியே 31 மில்லி மீட்டர் அளவுதான் இருக்கும். மில்லி மீட்டர் அளவு எவ்வளவு சிறியது என்பதை நீ அறிவாயல்லவா! ஆம். அப்படிப்பட்ட சிறிய அளவால்தான் கருவின் உருவைக் கணக்கிட முடிகிறது. எங்கோ வயிற்றுற்குள் ஒரு மூலையுள் முடங்கிக்கிடக்கும் 2-1 மில்லிமீட்டர் அளவுள்ள கருவை அளவெடுத்துக் கண்டு விட்டார்களே என்று வியக்கிறாயா? ஆம்! வியக்கத்தான் வேண்டும். இது தான் விஞ்ஞானம் நமக்குத் தேடித் தந்த செல்வம். ஆண்ட