பக்கம்:மக்கட் செல்வம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை I

95


வன் அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் உள்ளவன் என்பர் அடியவர். அணு சிற்றெல்லை. அண்ட முகட்டைக் கடந்தது பேரெல்லை. இரண்டு எல்லையையும் இன்னும் மனிதன் எட்டிப் பிடிக்க முடியவில்லை, என்றும் பிடிக்கவும் முடியாது. ஒருவேளை காண்பானாயின் அவன் கடவுள் நிலை பெறுவான். மனிதனுடைய ஆராய்ச்சிகளெல்லாம் இந்த இரண்டின் எல்லைக் கோடுகளுக்கு மிகவும் உள்ளே தான் அடங்கிக் கிடக்கின்றன. என்றாலும் இருபுறத்தும் அவன் ஆராய்ச்சியும் கண்ணும் பிறவும் விரிந்து செல்லுகின்றன. அந்த நிலையில் தான் கருப்பையில் இருக்கும் சிறு உருவைக்கூட அவனால் கண்டுபிடிக்க முடிகிறது, அவன் செயலும் திறனும் வாழ்க என வாழ்த்துகின்றேன்.

அன்பின் செல்வி!

இன்றைய விஞ்ஞானியின் ஆராய்ச்சி எத்தனையோ வகையில் மேம்பட்டு நிற்கின்றது. அவனுடைய ஆராய்ச்சி யால் உலகம் அடையும் நன்மைகள் மிகப்பல. ஆம்! ஒரு வழியில் அவன் ஆராய்ச்சி அழிவுத்துறைக்கு மிருகமாக மனிதனை அழைத்துச் செல்கிறது என்றாலும், இத்தகைய அரும்பெரும் உண்மைகளைக் காட்டவும் அது பயன்படுவதை எண்ணத்தான் வேண்டும். எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் கலந்தேதான் இருக்கும் போலும். நாம் நன்மையை மட்டும் மேற்கொள்ளலாம். இன்று இத்துடன் முடித்துக் கொண்டு கருவில் வளரும் குழந்தையின் ஒவ்வொரு நிலைப்பற்றியும் அடுத்த கடிதத்தில் விளக்கமாக எழுதுகிறேன்.

அன்புள்ள,
அப்பா.