பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 53 இந்தக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிவியல் மருத்துவமுறையினால் நாட்டில்-ஏன்-உலகில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. புதிய அறிவியல் மருத்துவமுறை களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நோய் கண்டவுடன் தக்க மருத்துவரையோ - மருத்துவமனை யையோ அணுகி நோய் தீர்த்துக்கொள்ளல் வேண்டும். அம்மை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கட்கு, மாரி யம்மனின் அருள் கிடைக்காமையே காரணம் என எண்ணா மல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்; பிறகு கோயி லுக்குப் போகலாம். வாழ்க்கையில் நல்லொழுக்கத்துடன் நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அளவுமீறி உண்ணுதல், புகைபிடித்தல், பொடி போடுதல், மது அருந் துதல், காமவெறி கொண்டலைதல் முதலியன கூடா. உட லில் உப்புநீர், சர்க்கரைநீர், குருதி அழுத்தம், கொழுப்பு மிகுதி முதலியன வராமல் காத்துக்கொள்ளல் வேண்டும். இவ்வாறு ஒழுகின் பிணியின்றிப் பல்லாண்டு - பல்லாண்டு வாழலாம்.