பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 79 ' உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்கு o ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்’’. ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்’’. இவ்வகையாக, அழியும் பொருளைப் பலர்க்கும் பயன் படுத்துவதால் அழியாப் புகழ் உண்டாகும் என்னும் நுட்பத்தைப் புரிந்துகொள்ளும் அறிவு எல்லார்க்கும் இருப்பதில்லை; இருந்தால், பொருளைப் பூட்டிவைத்து விட்டுப் புகழைக் கோட்டை விடுவார்களா? பொருளைப் பிறர்க்கு உதவுவதால் நமக்கு இழப்பு ஏற்படுவதுபோல் தோன்றினும் அஃது உண்மையான இழப்பாகாது; அதில் வளர்ச்சியிருக்கிறது- அதாவது, அந்த இழப்பில் புகழாகிய ஆக்கம் (செல்வம்) அடங்கியிருக்கிறது. இப் புகழைப் பெற்றவர்கள் இறந்துவிட்டாலும் உண்மையில் இறந்தவ ராகக் கருதப்பட மாட்டார்கள்; என்றும் உள்ளவராகவே மதிக்கப் பெறுவார்கள். அதாவது, அவர்தம் ஊன் உடம்பு மறையினும் புகழுடம்பு மறையவில்லை யன்றோ? இவ் வாறு ஆக்கத்தைத் தரும் இழப்பையும், என்றும் இருக்கச் செய்யும் இறப்பையும் கைவரப் பெறுபவரே உயர்ந்த வித்தகராவர். இத்தகு புகழ் வித்தகர்கள் துறவிகளைவிட ஏன், தேவர்களைவிடச்.சிறந்தவராவர். நிலவுலகம் மட்டு மன்று - தேவருலகங்கூட, துறவிகளையோ தேவர்களையோ போற்றாமல் இப்புகழ்ச் செல்வர்களையே போற்றும். " நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது’. " நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேன் உலகு".