பக்கம்:மச்சுவீடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 . மச்சு வீடு

சராசரங்கள் அத்தனை պա

தாய்ை நிறைந்திருக்கும் மகத்தென்னும் நல்ல

மகத்தான அம்மானே வைத்திட்டுத் தான்பூட்டி

வைத்திருந்த அம்மானே பிரளயமது வந்தாக்கே

பழியாப் பழியொதுங்கும் வேளையது வந்தாக்கே

விசிறிக்கும் அம்மானை சிருஷ்டிசமயம் வந்தாக்கே

திரும்பிப் பரிணமிக்கும். தமிழ் நாட்டில் வேதாந்தப் பாட்டிகள் என்ற ஒரு கூட்டத்தினர் உண்டு. இளம் பருவத்திலே கைம்மை நிலை பெற்றமையால் இகலோக வாழ்க்கை அவர் களுக்கு இல்லை யாகவே, வாழ்நாளை நன்னெறியிலே செலுத்துவதற்கு நல்ல பெரியோர்களை அண்டித் தத்துவ விசாரம் செய்வார்கள். தியானம் முதலிய அப்பியாசங்களிலும் ஈடுபடுவார்கள். அவர்களுக்குக் கைவல்ய நவநீதம் முதலிய வேதாந்தப் பாடல்கள் மனனமாக இருக்கும். வாய்மொழியாக வழங்கி வரும்

ஜீவ நாடகம்’, ‘அன்னை பின்னை முதலிய நாடோடிப் பாடல்களை ஆற்ருெழுக்குப் போலத் தடையின்றிச் சொல்லிக்கொண்டே போவார்கள். அ. வர் க ளை அணுகினல் அச்சில் வெளிவராத பல வேதாந்தப் பாடல்களைக் கேட்கலாம். அவர்கள் பாடும் வேதாந்த அம்மானை' என்ற நெடும்பாட்டுள் ஒரு பகுதி இது. சத்துவம், ராஜஸம், தாமஸம் என்னும் மூன்று குணங் களையும் மூன்று அம்மானைக் காய்களாக உருவகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/78&oldid=610747" இலிருந்து மீள்விக்கப்பட்டது