பக்கம்:மதன கல்யாணி-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 22 மதன கல்யாணி

பலமும் ஒரு பைசைகில் வண்டியை வைத்துக் கொண்டு, உள்ளே இருந்து வந்தவரை உற்று நோக்கிய வண்ணம் இருந்தான்.

அரை மணி நேரம் சென்றது; அது வரையில் வேஷக்காரிகளில் ஒருத்தியும் வெளிப்படவில்லை ஆதலால், அங்கே கூடி நின்ற ஜனங்களுள் பெரும்பாலோர் அவ்விடத்தை விட்டுச் சென்றனர். அதன் பிறகு, உட்புறத்தில் இருந்து வேஷங் கலைத்த சிறுமிகளும், மடந்தையரும் தனியாகவும் இருவர் மூவராகக் கூடி சம்பாஷித்த வண்ணமும் வெளிப்பட்டனர். அவர்களைப் புரசைப்பாக்கத்திற்கு அழைத்துப் போகும் பொருட்டு குத்தகையாக அமர்த்தப் பட்டிருந்த ஆறு குதிரை வண்டிகள் தயாராக நின்றன. கொட்டகை யின் வேலைக்காரர் இருவர் அந்தப் பெண்களோடு கூடவே வெளியில் வந்து ஒவ்வொரு வண்டியாக வாசற்படியண்டை கொணர்ந்து வண்டிக்கு நால்வர் வீதம் பெண்களை உட்கார வைத்து வண்டிகளை அனுப்பிய வண்ணம் இருந்தனர். பொன்னம்பலம் அருகில் நெருங்கி வண்டியண்டையில் ஏறிய பெண்டிரைக் கடைக்கண்ணால் உற்று நோக்கிய வண்ணம் இருந்தான் அதன் பிறகு வேறு சில மங்கையர் வெளிப்பட்டனர் அவர்கள் தங்களது சொந்த ஜாகைகளில் வெவ்வேறு திக்குகளில் இருந்தர்கள் ஆதலால், அவர்களது உறவினரோ நட்பினரோ வண்டிகளோடு வெளியில் தயாராகக் காத்திருந்து அவர்களை அழைத்துச் சென்றனர். அவர்களிலும் மோகனாங்கி காணப்பட வில்லை. அதன் பிறகு ஒரு நாழிகை கழிந்தது. வேறு எவரும் வரவில்லை. அதன் பிறகு இமை கொட்டாமல் கவனித்துக் கொண்டே இருந்தான். அப்போது அவ்விடத்தில் ஒற்றைக் குதிரை பூட்டப் பெற்ற ஓர் அழகிய பெட்டி வண்டி வந்து நின்றது. அது ஜன்னல்களால் நன்றாக மூடப்பட்டிருந்தது; வண்டி புதியது போல பளபளவென மன்னியது. அந்த வண்டி வந்து கால் நாழிகையான உடன் வி.பி. ஹாலுக்குள் இருந்து இன்னொரு ஸ்திரீ வெளிப் பட்டாள். அவள் பனாரீஸ் பட்டில் ஜரிகைப்புள்ளிகள் நிறைந்த சேலையையும் உயர்ந்த ஆபரணங்களையும் அணிந்திருந்ததாகத் தெரிந்தது. ஆனால் அவள் ஒரு பெருத்த சால்வையால் தலை முதல் கால் வரையில் நன்றாகப் போர்த்திக் கொண்டிருந்தமையால், அவளது முகம் சிறிதளவே வெளியில் தெரிந்தது. பொன்னம்பலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/40&oldid=649911" இலிருந்து மீள்விக்கப்பட்டது