பக்கம்:மதன கல்யாணி-3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மதன கல்யாணி கொண்டாலும், ஒடுகிற ஒட்டத்தில் கூர்மையான பீச்சாங்கத்தியை இடுப்பில் சொருகிக் கொள்ள எப்படி சாத்தியப்படும்? அதை மாத்திரம் தயவு செய்து தாங்கள் சொல்ல வேண்டும். கி. ஜெமீந்தார்:- நாங்கள் போய் இவரைப் பிடித்த போது இரத்தம் கசிந்த கத்தி இவருடைய மடியில் சொருகப்பட்டிருந்தது. ஆகையால், இவர் செடிகளின் மறைவில் ஒடிய போது அதை மடியில் சொருகிக் கொண்டிருக்க வேண்டும் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது. பா. குரோட்டன்:- மனிதன் செய்ய சாத்தியமிலலாத ஒரு காரியத்தை நாம் சாத்தியம் என்று நினைப்பதைவிட இவரைப பிடித்தவர்கள் அந்தக் கத்தியை இவருடைய மடியில் சொருகி வைத்தார்கள் என்று எண்ணிக் கொள்ளுவது நிரம்பவும பொருத்த மான யூகமல்லவா? கி. ஜெமீந்தார்:- நாங்களேன் அப்படிச் செய்ய வேணடும்? எங்களுக்கும் இவருக்கும் பகைமை உண்டா? பா. குரோட்டன்:- கத்தியைச் சொருகி வைத்து இவரைப பிடித்ததி லிருந்து, ஏதோ பகைமை இருப்பதாகத் தான் எண்ண வேண்டி யிருக்கிறது. கி. ஜெமீந்தார்:- நான் மாத்திரம் சொல்லவில்லையே! என்னோடு வந்த எத்தனையோ மனிதர்களும் இருக்கிறார்களே! அவர்கள் எல்லோரும் கண்ணாரக் கண்ட விஷயந்தானே இது. பா. குரோட்டன்:- அவர்கள் எல்லோரும் தங்களுடைய வேலைக் காரர்கள் அல்லவா? & கி. ஜெமீந்தார்:- ஆம்; வேலைக்காரர்கள் தான். அவர்களோடு ஒரு போலீஸ் ஜெவானும் இருந்தானே! பா. குரோட்டன்:- அதிருக்கட்டும்; அந்த இருட்டில் இந்த மைனரை நீங்கள் பிடித்துக் கொண்டீர்களே. அப்போது இவரை முதலில் யார் பிடித்ததென்பது தங்களுக்கு நினைவிருக்கிறதா? கி. ஜெமீந்தார்:- எல்லோரும் கும்பலாகப் போய்ப் பிடித்துக் கொண்டோம். ஆகையால் இன்னார் தான முதலில பிடிததாாகள என்று சொல்ல முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/154&oldid=853287" இலிருந்து மீள்விக்கப்பட்டது