உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்மை செய்யும் ஆற்றல் எது?

19


கிருத்தவ மதம் ஏதாவது நன்மை புரிந்ததா? மனிதர்களைப் பெருந்தகையாளராகவும், அருள் நெஞ்சுடையவர்களாகவும் அது ஆக்கிற்றா ? மாதா கோயில்கள் ஆதிக்கம் பெற்றிருந்தபோது, மக்கள் மிக்க ஏற்றம் பெற்றவர்களாகவும், மிக்க மகிழ்ச்சி கொண்டவர்களாகவும் ஆக்கப் பட்டார்களா?

கிருத்தவ மதம் இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், அயர்லாந்து ஆகியவிடங்களில் என்னென்ன நன்மைகளைப் புரிந்தது?

ஹங்கேரிக்கோ, ஆஸ்டிரியாவுக்கோ மதம் சாதித்த நன்மை என்ன? சுவிட்ஜர்லாந்து, ஹாலந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா ஆகிய இடங்களில் கிருத்தவம் என்ன முன்னேற்ற நிலைமையை உண்டாக்கிற்று? நாம் நாணயமான முறையில் சிந்தித்துப் பார்ப்போம். மதம் இல்லாமல் இருந்தால் இந்த நாடுகளெல்லாம் வீணாகிப் போயிருந்திருக்குமா? கிருத்துவத்தைத் தவிர, வேறு மதத்தை, இந்த நாடுகளெல்லாம் கொண்டிருந்தால், இவை பாழடைந்து போயிருந்திருக்குமா?

ஜோராஸ்டரைப் பின்பற்றுபவராக மாறி யிருந்தால், டார்க்குவேமாடா கெட்டுப்போயிருந்திருப்பாரா? தென் கடல் தீவுகளில் வழங்கும் மதத்தைப் பின்பற்றியிருந்தால் கால்வின் இன்னமும் மிகவாகக் குருதிவேட்கை கொண்டவராக மாறியிருந்திருப்பாரா? தந்தை, தனயன், புனித தேவதை ஆகியோரை மறுத்திருந்தால், டச்சு நாட்டு மக்கள் இன்னமும் மிகவாக முட்டாள்களாக மாறியிருந்திருப்பார்களா? கிருத்துவைப் பின்பற்ற மறுத்துக் கன்பூஷியஸ் கொள்கையை ஏற்றுக்கொண்டிருந்தால், ஜான் நாக்ஸ் மிகக் கேடானவராக மாறியிருந்திருப்பாரா?

அருள் உள்ளங்கொண்ட பரிசுத்த மதப் பாதிரிமார்களை எடுத்துக்கொள்ளுங்கள் ! அவர்களுக்குக் கிருத்தவ