6
மதமும் மூடநம்பிக்கையும்
நாட்டுப் பற்றுடையோரின் குருதியைக் கொட்ட வைக்கும்படி, கொடுமையாளர்களை இந்தக் கடவுள் தான் அனுமதித்தாரா?
தம்முடைய நண்பர்களைச் சித்ரவதை செய்யவும், கொளுத்தவும், தம் பகைவர்களுக்கு இவர்தான் அனுமதி அளித்தாரா?
இப்படிப்பட்ட கடவுள் எந்த அளவுக்கு மதிக்கத்தக்கவர்?
தடுக்கக்கூடிய ஆற்றல் படைத்த எந்த நல்லறிவுடைய மனிதனாவது, தன்னுடைய பகைவர்களால், தன்னுடைய நண்பர்கள் சித்ரவதைச் செய்யப்படுவதையும், கொளுத்தப் படுவதையும் அனுமதித்துக்கொண்டிருப்பானா?
ஆண்டவனுக்குப் பகைவர்களாக உள்ளவர்களைத் தன் நண்பர்களாக ஆக்கிக்கொண்டு, அவர்களை ஆதரித்து வருகிறது ஒரு பூதம் என்று, நாம் அறுதியிட்டுக் கொள்ளலாகுமா?
எல்லையற்ற பேராற்றலும், நல்ல பண்பும் கொண்ட கடவுள்தான் இவ்வுலகை ஆளுகிறார் என்றால், புயற் காற்றுகள், நில அதிர்ச்சிகள், கொள்ளை நோய்கள். கொடும் பஞ்சம் ஆகியவை நிலவுவதற்கு நாம் எவ்வாறு சமாதானம் கொள்வது?
மனிதர்களைக் கொன்று தின்னும் காட்டு விலங்குகள், கடித்தால் சாகவேண்டிவரும் நச்சுப் பற்களைக் கொண்ட நாகங்கள் ஆகியவை வாழ்வதற்கு நாம் எவ்வாறு சமாதானம் கொள்வது?
ஒரு உயிர் மற்றொரு உயிரைக் கொன்று தின்றே வாழ வேண்டும் என்ற உலகம் இருந்து வருவதற்கு நாம் எவ்வாறு சமாதானம் கொள்வது?