பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 43

 பதினாயிரம் மெழுகுவர்த்தி வெளிச்சம் தருகின்ற பல்பு. இதற்கு மின்சாரம் சப்ளை பண்றது அங்கே எங்கேயோ மறைவில் இருக்கிறது.

பழனியில் போகர் ஆக, திருப்பதியிலே கோரக்கர் ஆக, திருச்செந்தூரிலே பஞ்ச சித்தர்களாக அங்கங்கே இருக்கிறார்கள். ஏதோ விஷயம் தெரிந்த வர்கள் பழனிக்குப் போய்ப் போகருடைய சமாதியை வழிபட்டு வருகிறார்கள். அதே மாதிரி திருச்செந்தூருக்குப் போனால் பாதாளலிங்கம் என்று சொல்லுவார்கள். யாரேனும் ஒருத்தன் கேட்டான்னா அந்த விருப்பக்காரருக்கு கோவில்காரன் கொண்டு காட்டலாம். எல்லா இடங்களிலும் இந்தச் சித்தர்கள் தங்கிக் கொண்டு, விக்ரகத்தின் மூலமாகவோ அல்லது நடமாடும் மனிதர்கள் மூலமாகவோ தங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள். இரண்டும் உண்டு. விக்கிரகத்தின் மூலமாக அருள் செய்வதும் உண்டு. மனிதர்கள் மூலமாக அருள் செய்வதும் உண்டு. அப்படி எந்தவிதமான அருள் செய்தாலும், சமுதாயத்திற்கு எது தேவையோ அதனை இவர்கள் செய்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இந்தப் பெரியவர்கள் நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஏசு, புத்தர் முதலானவர்கள் செயற்கரும் செயல்களைச் செய்தார்கள் என்று நாம் சொல் கிறோம். இப்போது சிலபேர் இது முடியமோ என்று நினைக்கிறார்கள். நினைப்பதிலும் தவறு இல்லை. Angle என்று சொல்கிறோமே - எந்தக் கோணத்தில் நின்று பார்க்கிறோமோ அந்தக் கோணத்தின் அடிப்படையில் தான் விளங்கிக் கொள்ள முடியும்.