பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வீட்டுக்கு வீடு வெளிநின்று பல்லெல்லாம் காட்டுதற்கு நாணார், கலிகானா மேனி வளையும் குழையும் வணங்கித் துவண்டு நெளியும் மறுநாள் நிமிரும் அடடா ! நடக்காத கால்கள் நடந்துவரும், ஒன்றுங் கொடுக்காத கைகள் கொடுத்துவரும்; தேர்தலிலே வாக்காளர் எல்லோரும் வானுறையுந் தெய்வங்கள் பார்க்காத பேரெல்லாம் பார்த்திடுவர் கும்பிடுவர்; வெற்றி கிடைத்துவிடின் வேட்பாளர் மேலாவர் வெற்றுப் படிக்கல்லாய் வீழ்ந்திடுவர் வாக்காளர்; மாண்டவரும் மீண்டுவரும் மாய விளையாட்டைக் காண்டல் எளிதாகும் இந்தத் திருநாளில்; விந்தைமிகும் வேடிக்கை எத்துணையோ தேர்தலெனும் சந்தையிலே காணும், சதிகள் விளையாடும்; நிற்பவர்கள் நிற்கட்டும் நேர்மை நிலைநாட்டல் ல் கற்றவர்க்கும் மற்றவர்க்கும் உற்ற கடனாகும்: தீட்டுகிற திட்டத்தால் ஈட்டும் வளமெல்லாம் நாட்டில் ஒருதிசையில் நன்கு வளர்ப்பவர்தாம் தேய ஒருமை என்று தீந்தமிழை மாய்ப்பதற்கே ஆய வழிவகைகள் ஆற்றும் நிலைகண்டோம்; இந்தி மொழியொன்றை இங்கே திணிக்கின்றார் அந்த நிலை போதா தென் றன்று தமிழ்மாந்தர் ஆய்ந்தமைந்த நல்லெழுத்தை அப்படியே நீக்கிவிட்டுக் காய்ந்து சிறுகயிற்றில் தொங்குகிற கண்டம்போல் நேர்கோட்டில் தொங்கும் நெளிவெழுத்தைக் காட்டுகிறார் யார்கேட்பர் இந்நாட்டில் என்னும் நினைவவர்க்கு;

  • t تعی، بر نمیت تگهای ثاد سمیه - ض سے s1ٹی وی