பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இவ்வண்ணம் வாழுங்கால் ஒருநாள் என்றன் எழிலரசி வந்தென்பால் குழைந்த வண்ணம் 'கைவண்ணம் முன்னையினுஞ் சுவைக்கும் வண்ணம் காய்வண்ணஞ் சமைத்துள்ளேன் உண்ணும்' என்று; மெய்வண்ணம் அழகேறும் வண்ணம் வந்தாள்; மேலெண்ணம் யாதோஎன் றையங் கொண்டேன்; ஐவண்ணப் பட்டொன்று பார்த்தா ளென்ற அறிவிப்பின் வண்ணமெனப் பின்பு ணர்ந்தேன். ஒருநாள் நான் வாய்கு மட்டி மயங்கி நின்றேன் உதவாத பித்தத்தின் அறிவிப் பென்றாள் இருநாளும் அருகிருந்தே இஞ்சிச் சாற்றை எலுமிச்சைச் சாற்றுடனே கலந்து தந்தாள்; மறுநாளவ் வேந்திழைவாய் குமட்டக் கண்டேன் மாதுனக்கும் பித்தத்தின் அறிவிப் பென்றேன்; தெரியாதோ இதுகூடப் போங்க ளத்தான் தெரிவையரைத் தாயாக்கும் அறிவிப் பென்றாள். மக்கள்மெய் தீண்டுதல் நம் உடலுக் கின்பம் மற்றவர்தம் மொழிகேட்டல் காதுக் கின்பம், இக்குறளின் பொருளினிக்குஞ் செய்தி சொன்னாய் ஏந்திழையே வாழியநீ; எனினும் ஒன்றை அக்கறையோ டுனக்குரைத்தல் கடமை யாகும்: | அங்கேபார் சுவரெல்லாம் முக்கோ ணங்கள்! அக்குறிதான் நம்குடும்ப நலத்தைக் காக்கும் அறிவிப்பாம் அளவறிந்து பெறுதல் வேண்டும்.