பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கற்றார், பழிக்குக் கடுகளவும் நாணவிலை;

  1. == o == : a- تو ←? +! r守 மறறாா அதறகு மனதிக EEEEEEEEEEE

உரிமை உரிமைஎன்றே ஓயாமற் சொல்லி

மருவும் உரிமை மனிதர்பொதுச் சொத்தாக எண்ணா தலைகின்ருேம் ஏய்த்துத் திரிகின்ருேம் பண்ணா தனவெல்லாம் பண்ணி மகிழ்கின்றோம்; வாழ்வின் நலமெல்லாம் வாய்க்க முயன்றிடுவோம் தாழ்வு வருமேல் தரியோம் அதுமுறைதான்; ஆயினுமவ் வாழ்க்கை அயலவர்க்கும் வேண்டுமன்றோ? தீயனவே செய்ததனைத் தீய்த்துக் கரியாக்கி மாய்ப்பதுதான் நல்லதொரு வாழ்வாமோ? அன்னவரை ஏய்த்துப் பிழைப்பதுதான் ஈங்கினிய வாழ்வாமோ? மாண்புயர்ந்த காதல் மலரைவிட மெல்லிதெனக் காண்பதுதான் நம்முன்னோர் கண்டுரைத்த நல்வழியாம்; இல்லறத்து வாழ்வில் ஒருவன் ஒருத்திஎன்ற நல்லறத்தைச் சொல்லி நடந்தவரும் நம்முன்னோர்; நாகரிகப் பேரால் நலமறியாப் பாழுக்கு வேகமுடன் ஏகுகிறோம். வீணை நரம்பதனை மெல்ல வருடாமல் வேல்கொண்டு சாடுகிறோம்; நல்லதொரு பூவை நசுக்கிக் கசக்கிவிட்டுச் சொல்லரிய தேன்சுவைக்கச் சூழுகிறோம் அந்தந்தோ! இல்லறத்தில் வாழும் இருவர் பெறுமின்பம் ஈங்குத் தனியுடைமை; இவ்வரிய செம்மைநெறி நீங்கிப் பொதுவுடைமை யாக்க நினைக்கின்ருேம் இன்பம் பெறவே இழிசெயல்கள் அத்துணையும் வன்பிற் புரிந்திங்கு வாழ்கின்றோம்; நாம்மனிதர்!