பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வந்தால்



 

நிலையா உலகில் நிலைத்த புகழை நாட்டி, மாண்டு மண்ணொடு மண்ணாய் மறைந்தார் பாரதியார். ஆம். அவர் இனிமேல் திரும்பி வரமாட்டார் என்பது உறுதி. அதை உணர்ந்தேதான் பலர் அவரது பெயரைக் கூறிக் கொண்டே பல கொடுமைகளை இழைக்க முற்பட்டுள்ளனர். ஆனால், எதிர் பாராத விதமாக, ஏதோ இப்போது விளைகின்ற விஞ்ஞான முறைகளின் முயற்சியால் ஒரு வேளை மீண்டு வருவாராயின்...! வந்தால் என்ன?

இது எண்ணிப் பார்க்க வேண்டுவதுதான். இதோ இன்று செப்டெம்பர் 11-ஆம் நாள் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த எட்டயபுரத்தில் மெய்யடியார்கள் கட்டிய மண்டபங்கூடக் கண் முன்னே காட்சி தருகிறது. ஏன்! வானொலியில் அரசாங்கத்தார் அவர் பாடலைப் பாடக்கூட ஏற்பாடு செய்துள்ளனர். ஆம். ஒரு வேனை அந்தப் பாரதியார் உயிர்த்தெழுந்து வருவாரானால் இச் செயலை எல்லாம் கண்டு சிந்தை