பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 விந்தன்

மேல் போட்டு விட்டு ஜாக்கெட்டுக்குள் கையை விட்டாள், கடிதத்தை எடுக்க.

அதற்குள் ஒர் எண்ணம் பளிச்சிட்டது....

ஒருவேளை குளிக்கும் அறைக் கதவு உள்ளே தாளிடப்படாமலிருந்தால்?

தள்ளிப் பார்த்தாள்; தாளிடப்பட்டுத்தான் இருந்தது.

எதற்கும் வெளித் தாழ்ப்பாளையும் போட்டுத்தான் வைப்போமே? - ‘ஏன்? என்று கேட்டால் ‘விளையாட்டுக்கு என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால் போகிறது!

இந்தத் ‘தற்காப்பு நடவடிக்கை"களுக்குப் பிறகு கடிதத்தை எடுத்தாள், படிக்க.

அப்போது...

‘முதுகை அரிப்பது போலிருக்கிறது; கொஞ்சம் சொரிந்து விட்டுப்போகிறாயா?” என்று குரல் கொடுத்தான் ராமமூர்த்தி.

‘இதோ வந்துவிட்டேன்!’ என்று பதிலுக்குக் குரல் கொடுத்துக் கொண்டே அவசர அவசரமாகக் கடிதத்தை மடித்து மறுபடியும் ஜாக்கெட்டுக்குள் வைக்கப் போனாள் கல்யாணி.

‘அப்படி என்ன கடிதம் அம்மா, அவ்வளவு பத்திரமாக வைக்க?’ என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் விசாலம்.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த கல்யாணி. “கடிதம் இல்லையடி, எம்பிராய்டரி டிஸைன்” என்று பசப்பினாள்.

‘அது என்ன டிஸைனோ, யாருக்குத் தெரியும்?” என்று சொல்லிவிட்டு மேலே சென்றாள் அவள். -