பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ෆ

கலப்பு மனத்தின் தேவையைப் பற்றிக் கவிதை பல பாடியதோடு இருந்து விடாமல் தாமும் கலப்புத் திருமணம் செய்துகொண்டு, தம் பிள்ளைகள் அனைவருக்கும் அவ்வாறே செய்வித்துத் தம் கொள்கைக்கு வெற்றி தேடித் தந்ததன் மூலம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்: என்னும் வள்ளுவர் வாக்கைத் தோல்வியுறச் செய்தார். காரைக்குடியில் மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார் (1949)

'முடியரசன் எனக்குப் பின் கவிஞன் எனப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் பாராட்டப் பெற்றார் (1950)

குருதி உமிழும் கொடுநோய்க்கு இலக்காகி, புதுக்கோட்டைத் தமிழ்ப் புரவலர் அண்ணல் பு.அ. சுப்பிரமணியனார் அருட்கொடையால் உயிர்பிழைத்தார் (1955)

மூன்றாவது மகவான ஆண் மகன் பிறத்த்ல், செய்ந் நன்றியின் பொருட்டு, தன்னுயிர் காத்த அண்ணல் சுப்பிரமணியனார் நினைவாக அம்மகனுக்கு சுப்பிரமணியன் எனப் பெயரிட்டார் (1955)

"சுப்பிரமணியன் என்ற அம்மகன் மறைவு. கவிஞர் பெருந்துயரம் அடைதல் (1959)

சென்னை சென்று திரைப்படத்துறையில் ஈடுபட்டார். கண்ணாடி மாளிகை என்ற திரைப்படத்திற்கு பாடல், உரையாடல் எழுதினார். திரைத்துறையின் சிறுமைகளைக் கண்டு வெறுப்புற்று தம் இயல்புக்கும், கொள்கைக்கும், அத் தொழில் சிறிதும் ஒத்து வராததால் திரைத் துறையிலிருந்து வெளியேறினார் (1961)

மீண்டும் காரைக்குடியில் தமிழாசிரியர் L6ততীি (1962) -

இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் வழக்கு (1965)

lo • 3.