பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாட்டில் தமிழ்த்தெருவில் தமிழரிடை இசையரங்கில் தமிழை நீக்கித் திமிர்காட்டும் மனமுடையர் தேர்ந்தெடுத்துப்

பிறமொழியைத் திணிக்குங் காலை சுமைதாங்கிக் கல்லாகச் சூடில்லாச்

சிலையாகச் சோர்ந்து நின்றோம் அமிழ்தூட்டும் தமிழெங்கே? என அதட்ட

அறியாத ஆமை யானோம்.

அன்றுநமக் குணர்வூட்டி, ஆர்ப்பரிக்க

வழிகாட்டி, அறிவா னாய்ந்து நின்றுநமை நெறிப்படுத்தி, நிலைத்திருந்த

வசைநீக்கி, நிமிர்ந்து நிற்கக் குன்றெனவே நின்றானைக் குய்யமதை

வென்றானைக் கூடிப் பாடி இன்றுமிவன் வாழ்வானை என்றுமுள

தென்றமிழால் ஏத்தி நிற்போம்.

குய்யம் - வஞ்சனை