பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கடல்

16–9–1973

பச்சைமா மலைமுகட்டில் ஆழ்வார் பெய்த

பாடல்நா லாயிரமும் செந்தேன் ஆறு: மச்சவுரு மாலவனும் அயனும் அண்ணா

மலைவாழும் சிவமலையில் மூவர் பெய்த மெச்சுமிசைத் தேவாரம் திம்பா லாறு;

மேலவர்வாழ் குன்றத்துார்ப் பெருமான் பெய்த இச்சைமிகும் திருதொண்டர் பெருமை பேசும்

எழில்மிகுந்த வரலாறும் ஒருபே ராறு.

அவனடியைத் தொழுதுருகும் வாச கந்தான்

அழுதழுது பொழிந்துவைத்த கண்ணிர் ஆறாம்; எவனடியால் உலகளந்தான் அவன்றன் காதை

இயம்பும்நூல் உயிராறாம் பயில்வார் நெஞ்சைக் கவருமுலா துதுபிள்ளைத் தமிழோ டின்னும்

கலம்பகங்கள் சிற்றாறாம்; இவ்வா றெல்லாம் தவறாது மனம்புகுந்து பொங்கி யோங்கும்

தமிழ்க்கடலே நம்இராய சொக்க லிங்கம்.