இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ்க் கடல்
16–9–1973
பச்சைமா மலைமுகட்டில் ஆழ்வார் பெய்த
பாடல்நா லாயிரமும் செந்தேன் ஆறு: மச்சவுரு மாலவனும் அயனும் அண்ணா
மலைவாழும் சிவமலையில் மூவர் பெய்த மெச்சுமிசைத் தேவாரம் திம்பா லாறு;
மேலவர்வாழ் குன்றத்துார்ப் பெருமான் பெய்த இச்சைமிகும் திருதொண்டர் பெருமை பேசும்
எழில்மிகுந்த வரலாறும் ஒருபே ராறு.
அவனடியைத் தொழுதுருகும் வாச கந்தான்
அழுதழுது பொழிந்துவைத்த கண்ணிர் ஆறாம்; எவனடியால் உலகளந்தான் அவன்றன் காதை
இயம்பும்நூல் உயிராறாம் பயில்வார் நெஞ்சைக் கவருமுலா துதுபிள்ளைத் தமிழோ டின்னும்
கலம்பகங்கள் சிற்றாறாம்; இவ்வா றெல்லாம் தவறாது மனம்புகுந்து பொங்கி யோங்கும்
தமிழ்க்கடலே நம்இராய சொக்க லிங்கம்.