பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கதிரோன் சிரித்துவிடின் புழுக்கந் தோன்றும்

சிறியபனை விசிறிகளின் துணையை நாடும்; செங்கதிரின் வெயில்காயத் தானே வந்து

சிறியபுழு வீழ்ந்துடலம் சுருண்டு சாகும்; பொங்கிவரும் நின்சிரிப்பால் பகைவர் நெஞ்சம்

புழுக்கமுறும் விசிறிகளின் துணையை நாடும்; எங்களுளங் கவர்ந்தவனே பகைப்பு ழுக்கள்

இடந்தெரிய மாட்டாமல் வீழ்ந்து சாகும்.

திகழ்ந்துவரும் வெண்ணிலவு சிரித்தால் ஒன்று

சேர்ந்திருக்கும் காதலர்க்குக் களிப்பை யூட்டும்; மகிழ்ந்திருந்து பிரிந்தவர்க்கோ எரிச்சல் ஊட்டும்;

மதியினையே திட்டுகிற மருட்சி யூட்டும்; முகிழ்த்துவரும் நின்சிரிப்போ நின்னைச் சேர்ந்த

முன்னேற்றக் கருத்தினர்க்கு மகிழ்ச்சி யூட்டும்; இகழ்ந்துன்னைப் பிரிந்தவர்க்கோ எரிச்ச லூட்டும்;

ஏதேதோ திட்டுகிற் மருட்சி யூட்டும்.

உயர்வுக்கு வானத்தை உவமை சொல்வர்;

உழைத்துவரும் உயர்வுக்கு வானம் நிதான் மயிலுக்கு வான்சிரித்தால் தோகை ஆடும்

மாந்தருக்கு நீசிரித்தால் ஒகை கூடும்; பயமுறுத்தி இடியிடிக்கும் மின்னல் வீசும்

பார்மகிழ மழைபொழியும் வான்சி ரித்தால்; துயருறுத்த வருபகையை இடித்து மின்னிச்

சொல்மாரி நனிபொழியும் நீசி ரித்தால்.