பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதியிலுளார் நின்பெயரை மு.க. என்று

பகர்வதற்குக் காரணமென்? முத்து வேலர் புதல்வரென உணர்த்துதற்கா? இல்லை யில்லை

புலிநிகர்த்த நெஞ்சுடையான் எதிலும் என்றும் முதல்வர்கரு ணாநிதி.என் றுணர்த்து கின்ற -

முத்திரைதான் அவ்வெழுத்து; மெய்யெ ழுத்தின் முதலெழுத்தும் நீதானே, உயிராம் அண்ணா

முதலெழுத்தும் உன்னுடன்தான் இணைந்தி ருக்கும்

பிணியுற்ற தமிழினத்தைப் பிழைக்க வைக்கப்

பெரியாராம் மருத்துவரோ அறுவை செய்தார்; தணியட்டும் பிணியென்று மருந்தை அண்ணா

தந்திரமாக் கூட்டுக்குள் அடைத்துத் தந்தார்; துணிவுற்ற திருமணத்தோய்! நீயோ அந்தத்

தொழிலுடனே வலிக்காமல் ஊசி போடும் பணிகற்றாய்; பெயர்பெற்றாய், சித்தர் சொன்ன

பச்சிலையும் மூலிகையும் கற்றுக் கொண்டாய்.

மருத்துவனே பிணியகன்ற மாந்தர் நின்றன்

மருத்துவத்தின் திறங்கண்டு மகிழ்வு கொண்டு வருத்தமற வாய்விட்டுச் சிரித்தார்; நீயும்

வளர்தமிழ்ச்சொல் வருவாயால் சிரித்து நின்றாய்; சிறுத்தமதி படைத்தவரோ அதனைக் கண்டு

சிந்தைஎலாம் அழுக்காறு வளர்த்து நின்றார்; திருத்தமுற மருத்துவத்தைக் கல்லார் இங்குத்

திரிகின்றார் மருத்துவர்போல் எனச்சி ரித்தாய்; ه وعه کا