பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருதுயரம் வந்தாலும் உள்ளம் வாடி

ஒடுங்குகின்றேன் சிரிப்பதற்கோ இயல வில்லை; வருதுயரம் எதுவெனினும் நிமிர்ந்து நின்று

வாய்விட்டுச் சிரிக்கின்றாய் கலக்க மின்றி, கருணைநிதி கலங்கிவிடின் கழகத் தோழர்

கலங்குவரே என எண்ணி மறைக்கின் றாயா? வருபவைதாம் வரட்டுமெனை நாட்டுக்காக

வழங்கி விட்டேன் என எண்ணிச் சிரிக்கின்றாயா?

அறுசமயம் பிறசமயம் வெறுப்ப வன்தான்

ஆனாலும் அன்பழகற்(கு) அருகன் ஆனாய்; பிரிவுதரும் சாதிக்குப் பகைவன் தான்நீ

பிழையறியாச் சாதிக்கு நண்பன் ஆனாய்; உறுதியுடன் விடுதலையைப் பெற்று விட்டோம்

உரிமையுள தென்னரசும் உடையோம் என்று முரசொலியை முழக்குகின்றாய் ஆனால் இந்த,

முடியரசன் பாட்டுக்குள் கைதி ஆனாய்.

சிவபெருமான் குறைமதியைத் தலையில் வைத்தான்;

சிந்தனையால் நிறைமதியைத் தலையில் வைத்தாய்; சிவபெருமான் தலைமதியன்; நியோ என்றும்

சிரிக்கின்ற முகமதியன்; அற்றை நாளில் அவன்சிரித்தான் முப்புரத்தைச் சுட்டெ ரித்தான்; ஆற்றலுளாய்! நீசிரித்தாய் நம்மை யண்டித் தவறுசெயும் முப்புரியைச் சுட்டெ ரித்தாய்;

தனிமதியாய் எமதுதென்னா டுடையாய் போற்றி.