பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

59



வராத சூழ்நிலையை உண்டுபண்ணிக் கொள்வாள். வந்தாலும் திரும்பிக்கூட பார்க்கமாட்டாள். அப்படி ஏதாவது தனவன் கேட்டாலும் அவள் மறுமொழி கூறாமல், மெளனமாக இருந்து விடுவாள்.

அவன் மீறி, தன் முன்னால் வந்தாலும் கணவனைப் பார்க்க எரிச்சல் பட்டுக் கொண்டு. அந்தச் சூழ்நிலையை மிகவும் வெறுப்பாள். அவனைப் பார்க்காமல் இருப்பதையே ஆனந்தமாகக் கொள்வாள். அவனுடன் எந்தக் காரியத்திலும் இணைந்து செயல்படமாட்டாள். சொன்னாலும் அதைத் தான் கேட்காதது போல, தன் காரியங்களையே செய்து கொண்டிருப்பாள்.

கணவனது நண்பர்கள் வந்தாலும் அவர்களையும் அலட்சியம் செய்து தான் வெறுக்கும் நிலையை, கணவனுக்கு கோடிட்டுக் காட்டுவாள்.

படுக்கையில் படுத்திருக்கும் பொழுது, முன்புறமாகத் திரும்பாது பின் புறத்தைக் காட்டியவாறு சுருண்டு படுத்துக் கொள்வாள். இத்தனையையும் புரிந்துக் கொண்டு, மனைவியை சாந்தப்படுத்துவது ஒரு சாகசச் கலைதான். அந்த அற்புதக்கலையை அறிந்திருக்கும் கணவனே மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழமுடியும்.

அந்த சாகசச் கலையை என்னவென்று எனக்கும் சொல்லித் தாங்களேன்?

ஊடுதல் காமத்திற்கு இன்பம். அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின் என்பதுபோல, ஆத்திரம் கொண்டு ஒதுங்கிவிடும் மனைவியிடம், மெதுவாகப் பேச்சைக் கொடுத்து, அவளுக்கு கோபம் வந்த காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.