யாமத்து மழை 49
தோழி : அங்கும் மலைச்சாரல்களில் பசிய தினைப்பயிரை மலைநாட்டு மக்கள் விளைவிப்பார்கள். அடுக்கலிலே விளையும் அந்தத் தினையைக் குறமகளிர் காவல் புரிவார்கள்.
தலைவி : நாம் காத்தோமே, அது மாதிரியா?
தோழி 1 ஆம்; அதே போலத்தான். ஆனல் பைந்தினை யைக் காக்கும் கொடிச்சியர் யாவருக்கும் உனக்குக் கிடைத்த ஊதியம் கிடைக்குமா? நீதான் உன் காத லனைத் திணைப்புனத்தைக் காவல் செய்கையில் பெற் முய். (சிரிக்கிருள்).
தலைவி ! (நாணத்தோடு) சரி சரி; அவர்களுக்கு என்ன
தான் கிடைக்கும்?
தோழி : அற்புதமான காட்சிகள் காணக் கிடைக்கும். எவ்வளவுதான் ஊக்கத்தோடு காவல் புரிந்தாலும் ஏமாற்றந்தான் கிடைக்கும்.
5ు : அது என்ன? ஏ மாற்றம் கிடைப்பதாவது?
தோழி 1 ஆம்; கவனெறிந்தும் தட்டையைத் தட்டியும் கிளிகளை ஒட்டிக் காவல் புரியும் அந்தக் கொடிச்சிய ரைச் சில விலங்குகள் ஏமாற்றிவிடும். -
தலைவி : யானையையா சொல்கிருய்? - -
தோழி : யானையைக் கொடிச்சியர் என்ன செய்யமுடியும்? கானவர் அம்பு எய்து அல்லவா அதை ஒட்ட வேண்டும்?
தலைவி பின்னே நீ எந்த விலங்கைச் சொல்கிருய்?
மனே-4 .