பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் பண்பு

இல்லற இன்பத்துக்கு இன்றியமையாதவள் காதலி. ஆனல் கணவன் மனைவியருடைய காதல் வாழ்க்கைக் கும், அவர்கள் ஆற்றவேண்டிய அறச் செயல்களுக்கும் உற்ற துணையாக இருப்பது பொருள். செல்வம் இன்றி உலகத்தில் எதைத்தான் சாதிக்க முடியும்? பொருள் இல் லார்க்கு இவ்வுலகமே இல்லை.

இந்த உண்மையை உணர்ந்தவன் காதலன். ஆகவே தன்னுடைய இல்லற வாழ்வு பொருளின்றி நலியக் கூடா தென்று எண்ணிஞன். வெளி நாடுகளுக்குச் சென்று பொருளீட்டும் விருப்பம் அவனுக்கு உண்டாயிற்று அதற் குரிய ஆற்றலும் அறிவும் படைத்தவன் அவன்; ஊக்கமும் உறுதியும் உடையவன். அப்படிப் பொருள் தேடச் சென் ருல் திரும்பிவரச் சில காலம் ஆகும். அதுவரையில் தன் காதலியைப் பிரிந்திருப்பது அவனுக்குத் துன்பமாகத் தான் இருக்கும். ஆயினும் மனவுறுதியிலுைம் சென்ற இடத்தில் செய்யவேண்டிய முயற்சிகளினலும் அந்தப் பிரிவுத் துன்பத்தை அவன் ஒருவாறு ஆற்றிக் கொள்ள லாம். -

அவனுடைய காதலியோ? திருமணம் ஆனது முதல் இதுவரையில் அவள் அவனைப் பிரிந்ததே இல்லை. இப் போது ஏற்படப் போகும் பிரிவில் அவள் வாடி வதங்கிப் போவாள்.-இதை நினைக்கும்போது அவன் உள்ளம் சங் கடத்துக்கு உள்ளாயிற்று,

அவன் பிரிந்து போவது கிடக்கட்டும். "நான் போய் வருகிறேன்' என்று அவளிடம் சொல்ல வேண்டுமே!