பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மனே விளக்கு

யும் ஒருத்தி சொல்லி வருந்தினள். அவள் பேதைமையை யும் வெள்ளே உள்ளத்தையும் ஒருத்தி சொல்லி அரற்றினுள்.

அது நல்ல வேனிற்காலம். குறிஞ்கி நிலத்தில் இருந் தது அவர்களுடைய ஊர். அழகான மலைப் பக்கம். அவர் கள் ஊரை அடுத்து நெடுந் தூரத்துக்கு அப்பால், குறிஞ்சி நிலமாக இருந்த பகுதி இப்போது பாலே நிலமாகி விட்டது. நல்ல மழை பொழிகிற வரைக்கும் அங்கே வெப்பம் தாங்க முடியாது. காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை என்று சொல்வார்கள். மலையும் மலேயைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் ஆகும். வேனிற் காலத் தில் அதிக வெப்பத்தில் முல்லை நிலத்தில் சில பகுதியும் குறிஞ்சி நிலத்திற் சில பகுதியும் தம்முடைய வளப்பத்தை இழந்து நிற்கும்; பாலே நிலமாக மாறும். தமிழ் நாட்டில் இயற்கைப் பாலைவனம் இல்லை. வேனிலின் கொடுமையால் இலகாலம் பசுமை இழந்து வளமிழந்து நிற்கும் இடங்கள் மாத்திரம் உண்டு. சில காலங்களில் மாத்திரம் பாலை நிலம் உண்டாவதால் தமிழ்நாட்டில் நிரந்தரமாக அதற்கு இல்லை. குறிஞ்சி, பாலை, முல்லே, மருதம், நெய்தல் ناسا { என்று ஐந்து வகை நிலங்கள் இருந்தாலும், இயற்கையில் பாவே அமையாமையால் பூமியை நானிலம் என்று சொல் வார்கள். நான்கு வகைப்பட்ட நிலம் என்ற பொருளில் அவ்வாறு சொல்வது வழக்கம், பாலே நிலமும் இயற்கை யாக இருந்தால் ஐந்நிலம் என்று சொல்லலாம். அது இல் லாமையால் நானிலம் என்று சொல்வதுதான் பொருத்த щргr65rgil.

குறிஞ்சி நிலம் வேனிற்காலத்தில் பாலையாக மாறி நின்ருல் முன்பு அங்கே வாழ்ந்திருந்த விலங்குகள் தம் திறமெல்லாம் குறைந்து நிற்கும். குறிஞ்சி திரிந்த பாலை நிலம் மேலே சொன்ன காதலர் இருவரும் போகும் வழியில் இருந்தது. அதைக் கடந்துதான் அவர்கள் போக வேண்டும்.