பக்கம்:மனோகரா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-11 மனோஹரன் 3

பத் :

பத் ;

Þrtr :

சத் ே

பத் ;

மனோஹரா, உனது மூதாதையினுடைய சபதத்தை நிறை வேற்றுவையா?

அம்மணி, அதை இன்னதென்று கூறும், ஒரு நொடியில் விடுகிறேன்.

அத்துவுடனாகிய முத்துவிஜயபாண்டியனது சென்னியை இவ்வுடைவாளால் சேதித்து, அவன் நம்மிடமிருந்து கவர்ந்த நாடு நகரம் முதலியவற்றையெல்லாம் மீட்க வேண்டும். கண்ணே, செய்வையா நீ, இதை?

அம்மணி, உமதருளாலும், தெய்வுகடாட்சத்தினாலும், எனது புஜபல பராக்கிரமத்தினாலும் அப்படியே செய் கிறேன்-இது சத்தியம்!

கண்ணே, இவ்வுடைவாளால் உன் பகைவரை யமனுல குக்கேற்றி, உனது சபதத்தை நிறைவேற்றி, உனது கீtத்தி யையும் புகழையும் நிலைபெறச் செய்து, சீக்கிரம் உன் தந்தையும் நானும் மகிழும்படி வெற்றி வீரனாகத் திரும்பி வருவாய்!

(பத்மாவதி உடைவாளை மனோஹரன் கையில் கொடுக்கிறாள். அரண்மனைக்கு வெளியில் ஒருங்கு சேர்க்கப்பட்ட சைனி யங்கள் 'ஜெய: ஜெய' என்று கோஷிக் கின்றன, !

அம்மா, நற்சகுனமும் நமக்கு வாய்த்தது. இளவரசர் ஆப் படியே வெற்றி பெற்று வருவார் என்பதற்குத் தடை யில்லை.

அதற்குச் சந்தேகமென்ன?

மனோஹரா, உனது பாட்டனாரும் முன்னோர்களும் உட்கார்ந்து அரசாட்சி செலுத்திய சிங்காதனம் பாண்டி யனது சபையிலிருக்கிறது. அதையும் எப்படியாவது மீட்டுக்கொண்டு வா. உனது பாட்டனார் அதை எனக்கு ஸ்திரீ தனமாகக் கொடுக்க எண்ணியிருந்தார்,

! அப்படியே ஆகட்டும், அம்மா, நான் விடைபெற்றுக்

கொள்ளுகிறேன்-நேரமாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/12&oldid=613248" இலிருந்து மீள்விக்கப்பட்டது