ß8 மனோஹரன் (அங்கம்.3 நான் வீணில் இறப்பதோ? போய் கேட்டுப் பார்ப்போம் மனோஹரரையே, இதற்கு என்ன நியாயம் கூறுகிறா ரென்று அவர் சத்திய்வான். எப்படியும் இருவர் லொருவர் இறக்கவேண்டிவரின் நானிறக்கவேண்டுமே யொழிய மனோஹரர் இறப்பது நியாயமன்று-நாள் இறக்கத்தான் வேண்டும்! இப்படிப்பட்ட மஹாராஜா விடம் மந்திரியாயிருந்ததற்குத் தண்டனை வேண் டாமோ?-ஐயோ! நா னெ ப் படி மனோஹரரிடம் இதைக் கொடுத்துக் கேட்பது? ஈசனே! ஈசனே! எல்லா முனது செயல்!
蠱*零 ராகம்-செஞ்சுருட்டி. தாளம்-சாபு
பல்லவி.
இதுதானா எந்தன் விதி
ஏதுநான்செய்குவேன் சிவசிவமே (இது)
அதுபல்லவி,
பாதிமதியோனே பாவியா யென்றனை
படைத்ததேனறியேன் சிவசிவமே, (இது)
சரணம்.
கோதிலாமன்னன்மெய்கறியும் கேளாமல்
சிறியே சென்றனன் சிவசிவமே. (இது)
(போகிறார்.) காட்கி முடிகிறது.
இரண்டாவது காட்சி
இடம்-நந்தவனம். காலம்-மாலை. மனோஹரன்-ஒர் ஊஞ்சலின்மீது சயனித் திருக்க, விஜயா
பக்கத்திலுட்கார்ந்து வெற்றிலை மடித்துக் கொடுக் கிறாள்.
வி : பிரானதாதா, பாண்டியதேசத்திற்குப் போய்லந்தீரே
என்னசழாசாரம்:எல்லாம் சொன்னிரா என்னிடம்: