பக்கம்:மனோன்மணீயம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் : இரண்டாம் களம் 103 (1ரைக் கையாற்றடுத்து) 60. நிரந்தரம் ! ஐயோ! நொந்தனை! நில்! நில்! இரைந்ததென் ? அழுவையோ? ஆயின் ஏகுதி நீரே! நீ ரே! என்னை புன் நிலைமை? f யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்: நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும் 65. உனைப்போல் உளவேல் பினைப்பே றென்னை? (நாங்கூழ்ப் புழுவை நோக்கி) ஒகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு ஒவாப் பாடே உணர்வேன்! உணர்வேன்! உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில் மிகும் உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ. 70. எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை விடுத்தனை யிதற்கா, எடுத்த உன் யாக்கை. உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய விழுமிய சேறாய் வேதித் துருட்டி வெளிக் கொணர்ந் தும்புகழ் வேண்டார்போல 75. ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால் இப்புற் பயிர்நீ இங்ங்ணம் உழாயேல் எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும் குறும் புசெய் எறும் புங் கோடி கோடியாய் புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை? 80. ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள (நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி) விழுப்புகழ் வேண்டலை அறிவோம். ஏனிது? துதிக்கலம். உன் தொழில் நடத்துதி ஆ1 ஆ! எங்கு மிங்ங்னனே இணையிலா இன்பம் பங்கமில் அன்புந் தங்குதல் திருந்தக் 85. காணார் பேணும் வாணாள் என்னே! அலகிலாத் தோற்றமோ டிலகிய உலகிற் சிதறிய குணக்கதிர் செறிந்து திரள வைத்தசிற் றாடியின் மையமே? யொத்த உள்ளமும் உடலும் பெற்றுங் கள்வர்... 90. நினைக்கலை, தீயினை நினைப்பதுந் தீதே! F- ஒழியாத துன்பம் 2. வேறுபடுத் 3. போற்றுகின்றோ மில்லை. 4. ள்ல்லையில்லாத 5. விளங்கிய 6. ఫే: (Hand lence) 7. நடுவிடம் (Focus)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/105&oldid=856077" இலிருந்து மீள்விக்கப்பட்டது