華門 108 மனோன் மணியம் 2-வது உழ : 185. குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம் முதல் உழ : o ஆயினும், நமக்கஃ திழிவே, மேலும் தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக் குறுதுயர் ஒருவரும் ஆற்றார். 2-வது உழ : - அறிவிலாத் தந்தையர் தம்வினை மக்களைச் சாரும்; 190, சுந்தர வாணியின் சிந்தை நோய் வழுதியை விடுமோ? சொல்லாய். முதல் உழவ : விதியெனப் பலவும்: படியோர்? பாவனை பண்ணித் தமது கடமையின் விலகுதல் மடம்ை; அதனால் நாட்டில்-போர்வரின் நன்குபா ராட்டி 195. எஞ்சா வெஞ்சமர் இயற்றிலே தகுதி 2-வது உழ ! அரசன், அரசனேற் சரியே; சுவாமி! உரையீர் நீரே திருவார் வாணியை அறியீர் போலும்: ol- of அறிவோம், அறிவோம்: நல்ல தப்புறம் செல்லுமின் நீவிர்............... (உழவர் போக) (தனதுள்) 200. ஏழைகள்! தங்கள் ஆழமில் கருத்தில் தோற்றுவ தனைத்தும் சாற்றுவர். அவர்தம் தோற்றமில் மாற்றம் சிறுமியர் மழலைபோல் சுகம்" தருமொழிபோல், சுகந்தரும் சூழ்ச்சியும் அனுமா னிக்கும் அளவையும் முனும்பினும் 205. கூட்டிக் காரண காரியக் கொள்கைகள் காட்டலும் காணக் களிப்பே! ஆயினும் பழுதல பகர்ந்தவை முழுதும் முன்னோர் షీ# தெய்வ 器 செப்புவர். அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம் 210. வரும்வித மிதுவே! மட்குடத் துளநீர் 1. குட நாட்டரசன் (சேரன்) 2. உலகோர் 3. கிளி