* 14 மனோன் மணியம் நின்றதனி யிடமிவர்கள் நேர்ந்தவுடன் முனிவன் நெருப்பின்னும் எழுப்புதற்கு நிமலவிற கடுக்கி ஒன்றியமெய்ப் பத்தரில்தன் உளங்கூசி யொருசார் ஒதுங்குகின்ற மைந்தனகம் உவப்பஇவை உரைக்கும்: (14), "இனி நடக்க வழியுமிலை; இனித்துயரும் இல்லை; இதுவே நம் மிடம்மைந்த! இக்கனலி னருகே பனிபொழியும் வழிநடந்த பனிப்பகல' இருந்து பலமூல மிது புசிக்கிற் பறக்குமுன திளைப்பே. (15) தந்நாவி லொருவிரலைத் தாண்டவறி யாமல் சாகரமும் மலைபலவுந் தாண்டியலை கின்றார் என்னேயிம் மனிதர்மதி!' என நகைத்து முனிவன் இனியகந்த முதலனந்த இனம் வகுத்தங் கிருந்தான். (16) இருந்தமுனி வருந்தினவ ஏதுனது கூச்சம்? - இருவருமே யொருவரெனி லெவர் பெரியர் சிறியர்? திருந்த அ ைலருகிலினிச் செறிந்துறைதி மைந்த ! சேர்ந்தார்க்குக் களிப்புதவுஞ் சேரார்க்குப் பனிப்பே" (17, என இரங்கி இரண்டுமுறை இயம் பியுந் தன் னருகே யேகாம லெதிரொன்று மிசையாமல் தனியே மனமிறந்து புறமொதுங்கி மறைந்துவறி திருந்த மகன் மலைவு+ தெளிந்துவெளி வரும்வகைகள் பகர்ந்தான். பகர்த்தநய மொழிசிறிதும் புகுந்ததிலை செவியில்: பாதிமுக மதியொருகைப் பதுமமலர் மறைப்பத் திகழ்ந்தசுவ ரோவியம்போ லிருந்தவனை நோக்கிச் சிந்தை நரிை நொந்துமுனி சிறிது கரு திடுவான் (19) செந்தழலு மந்தவெல்லை திகழ்ந்தடங்கி யோங்கி "திகைககனலி பிடித்தலைக்கு ஞ சிறுபூனை" யெனவே விந்தையொடு நடம் புரிந்து வீங்கிருளை வாங்கி" மீண்டுவர விடுத்தெடுத்து விழுங்கி விளங் கினதே (20) மொழியாதும் புகலாது விழிமாரி பொழிய முகங்கவிழ வதிந்த குறி முனிநோக்கி வினவும் 'எழிலாரு மிளமையினில் இடையூறா திகளால் இல்லமகன் றிவ்வுருவு மெடுத்திவண்வந் தனையோ? (21)
- тсягти шъ **
1. ஆல், அரசமர விறகு 2. நடுக் கிம் நீங்க 3. கிழங்கு தி , மிகக்சம் 5. தண்ணித்து.